வெள்ளி, 30 நவம்பர், 2012

ரகசிய நூல்

பல்வேறு சொற்களை சேர்த்து
வார்த்தைகளாய் பேசுகின்றேன் உன்னிடம்
அவ்வார்த்தைகளை கோர்த்திருக்கிறது
ரகசிய நூலொன்று.....
வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும்
உனக்கு நூலின் ரகசியம் புரிவதில்லை
என்றேனும் ஒருநாள்
வார்த்தைகள் மறைந்து போகலாம்
அன்று நூலின் ரகசியங்கள் புரியுமுனக்கு
காய்ந்த பூக்களின் உதிர்வுக்கு பின்
தெரியும் நாராய்......

6 கருத்துகள்: