வெள்ளி, 19 மார்ச், 2010

கொசு

குரல் கொடுக்கும் பூக்காரிக்கும்
கூவி அழைக்கும் குல்பிக்கரானுகும்
மௌனமே பதிலாக வருகிறது
கொசுவுக்கு பயந்து சாத்தப்பட்ட
கதவுகளிடமிருந்து ...........

புதன், 17 மார்ச், 2010

நினைவு

என் கனவு சோலை
முழுவதும் பூக்களாக
உன் முகம் மட்டும் தான்
தெரிகிறது
உன் கனவு சோலையில்
பூக்களாக அல்ல
முட்களாகவாது என்
நினைவுகள் தோன்றுமா....?

கண்ணாடி

எந்த ஒரு விஷயத்திலும்
உன் முகம் காட்டும்
கோபமோ மகிழ்ச்சியோ
மட்டுமே நான் பிரதிபலிக்கிறேன்
பெண்ணாய் பிறந்ததை விட
நீ பார்க்கும் கண்ணாடியாய்
பிறந்திருக்கலாம்
வலிகளாவது மிஞ்சியிருக்கும் .....

செவ்வாய், 16 மார்ச், 2010

நம்பிக்கை

இருள் சூழ்ந்த
குழியின் உள்ளிருந்து
அண்ணாந்து தேடுகிறேன்
இழையாய் வருகிறது
நம்பிக்கை எனும் ஒளி
கயிறாய் இல்லையென்று
கலங்கி நிற்காமல்
இழை பற்றி ஏறுகிறேன்
என்றேனும் ஒளி பிறக்குமென.......

வேண்டுதல் .

மூவாயிரம் தெய்வத்திடம்
வேண்டுகிறாள்
மூன்று பெண்களை
பெற்றவள் ....
வளம் கொழிக்கும் வாழ்வு
வேண்டி அல்ல
வரதட்சணை வாங்காத
மூன்று மருமகன்களை வேண்டி ......

அந்தஸ்து ..

தெருவில் அழுது
கொண்டே செல்லும்
குழந்தையை
வாரியணைத்து ஆறுதல்
சொல்ல விடாமல் தடுக்கிறது
மாடி வீடும், பணகார அந்தஸ்தும் ....

பொய் சுவடுகள்

உன் வாசல் கதவை
தாண்டும் போது மட்டும்
பூமி அதிர நடப்பாள்
அவள் கொலுசொலி
நீ கேட்க ....
அதுவரை புன்னகை
மட்டும் பூக்கும் அவள் இதழ்கள்
உன் வாசல் தாண்டும் போது
சத்தமாக சிரிக்கும் ....
காணாதவரை கண்டது போல்
நிறுத்தி வைத்து உன் வாசலில்
கதைப்பாள் ....
சுவடுகளை பின்பற்றி
காதெல்ன்று நீ போய்
சொன்னால்
ஐயோ இல்லையென்று
தந்தை பின்னே ஓடுவாள்
பொய் சுவடுகளை நம்பாதே
பின் வேதனையில் வெம்பாதே ........

பயணச்சீட்டு

வரிசையில் நிற்ப்பதில்லை!
போக்குவரத்தில் மாட்டுவதில்லை!
கூட்டத்தில் நசுங்குவதில்லை !
விபத்துகளும் நேருவதில்லை !
கொக்குகளே
உங்களுக்கு எங்கே கிடைத்தன
இந்த சுகமான பயணத்துக்கான
சீட்டுகள் ....?

பார்வை .

தந்தையின் கோபம்
தாயின் கண்டிப்பு
தேர்வின் தோல்வி
நண்பர்களின் கேலி
எதுவுமே தராத
மனவலியை தருகிறது
உனது கடைகண்ணின்
ஓர் அலட்சிய பார்வை ............

மலர்

என்னுள் மலர்ந்தது
காதல் மலரொன்று
அதை உன் கண்களில்
படாமல் மறைகிறேன் இன்று
மலரை நீ சூடாமல்
போனாலும் பரவாயில்லை
அதை வாடாமல் பாதுகாப்பேன்
என்றும் என் மனதில் வைத்தே ....

வெள்ளி, 12 மார்ச், 2010

வாழ்க்கை..

நூறு பவுன் நகை
நூறு புடவை,மாட்டுவண்டி
பத்து ஏக்கர் நிலம்,வெள்ளி பாத்திரம்
சீதனமாக கொண்டு வந்ததாக
அகங்காரத்தோடு எல்லோரையும்
அடக்கி திரிந்தவள்
வெறும் கரும் புகையாய்
மறைகிறாள் இறந்ததும் ......

புதன், 10 மார்ச், 2010

வாலி

எல்லோர்க்கும் அறிவாளி நான்
உன் முன்னே மட்டும் அறிவீலி
சூரியன் முன்னே மங்கிவிடும்
மெழுகு விளக்கா நான் ?
இல்லை என் அறிவில் பாதியை
எடுத்து கொள்ளும் வாலியா நீ?

நிழல் ..

நெடுந்தூர என் பயணத்தில்
அனலின் வெப்பத்தில்
நான் தகித்த போது
என் மேல் படர்ந்த
உன் நிழலின்
சுகத்தில் மயங்கி நின்றேன்
நிமிடத்தில் மறைந்ததும்
தான் புரிந்தது
நீ என்னை தொடரும்
நிலவின் நிழல் அல்ல
நிமிடத்தில் தாண்டும்
மேம்பால நிழல் என்று....

விருப்பங்கள் ..

என் விருப்பங்களை எல்லாம்
முழுமையாக நிறைவேற்றுவதாக
மமதை கொள்கிறாய்
உனக்கு தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........

செவ்வாய், 9 மார்ச், 2010

ஏக்கம்

ஆடம்பரமான பங்களா
உல்லாசமான கார் பயணம்
கட்டு கட்டாய் பணம்
உடல் மூடும் நகைகள்
எல்லாமே தூசியாய் தெரிகிறது
தெருவில் விளையாடும் பிள்ளைகளை
ஏக்கதுடன் பார்க்கும் என் மகளின்
பார்வை முன் ..........

திங்கள், 8 மார்ச், 2010

ஜன்னல்

எப்போதும் ஆறும்
நான்கும் அடிக்கும் என்
மகனின் மட்டைபந்து
இப்போதெலாம் மிக
மெதுவாகவே தட்டபடுகிறது
எதிர் வீடு ஜன்னலை
பார்த்துக்கொண்டே. ......

வெள்ளி, 5 மார்ச், 2010

தகுதி

வசிக்க தகுதியில்லா
இடங்கள்
காற்றில்லாத அறை
காதலில்லாத மனது .....

பயணம்

திகிலூட்டும் பயணங்கள்
வேகமாக செல்லும் வண்டி
நெளிந்து வளைந்து
வாகனங்களின் ஊடே
பயணிக்கும் அனுபவங்கள்
நேற்று வரை ரசித்தேன்
இன்று என் மகன்
ஓட்டுவதை பார்க்கும் வரை ......

சூரியகாந்தி ..

என் கண்களும்
சூரியகாந்தி பூக்களும்
ஒன்று தான்
பூக்கள் சூரியன்
இருக்கும் திசையை
மட்டுமே நோக்குகின்றன
என் கண்கள்
நீ இருக்கும் திசையை
மட்டுமே நோக்குகின்றன .......

துருவங்கள்

நீ இதழ் மூடி மௌனம் காக்கிறாய்
நான் என் எண்ணங்களை எல்லாம்
வார்த்தையாய் வடிக்கிறேன்
இரு துருவங்களாய் நீயும் நானும்
ஆனாலும் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறோம்......

புதன், 3 மார்ச், 2010

ஆசான்

வேதனைகள் ஏக்கங்கள்
ஏமாற்றங்கள் துன்பங்கள்
எல்லாவற்றையும் தொண்டைக்குழியில்
நிறுத்தி புன்னகை மட்டும் காடுகின்றாயே!
உனது ஆசான் பெயர் திருநீலகண்டரோ ?

மனம்

பாரங்களை ஏற்றாதிர்
மனம் ஒரு கழுதையல்ல ...
துக்கங்களை சுமக்காதிர்
மனம் ஒரு சுமைதாங்கி அல்ல ....
ஏக்கங்களை நிரப்பாதிர்
மனம் ஒரு அழுக்கு தொட்டி அல்ல ....
சல்லடையாய் வைத்திருங்கள்
மன சங்கடங்கள் ஓடி விடும் ...........

துக்கம்

தாய்மாமன் இறந்தாராம்
சேதி வந்து சேர்ந்தது
பிள்ளையை குளிக்க வைக்கணும்
மாமனுக்கு சோறு கொண்டு போகணும்
அத்தைக்கு கூழு கரைக்கனும்
வீட்டை கூட்டி பெருக்கணும்
மாட்டுக்கு தண்ணி காட்டனும்
அத்தனையும் முடிச்சுட்டு
நானும் போய் சேர்ந்தேன்
நான் படும் துன்பங்களும்
சேர்த்து வச்ச துக்கங்களும்
கரையும் வரை அழுதேன்
வீடு போய் சேர்ந்ததும்
வேற வேலை பர்க்கணுமுல...