வெள்ளி, 14 நவம்பர், 2014

பயணங்களின் பதிவுகள் (மஹாபலிபுரம்)

மஹாபலிபுரம் பார்க்க செல்வோம் என்று அக்கா சொன்னதும் அவசரமாய் தலையாட்டி மறுத்தோம் நானும் தம்பியும் ..பிள்ளைகள் அதற்கு மேல் போட்டிங் ,மால்,சினிமா என்று வரிசைபடுத்தினர்..வரலாற்று ஆசிரியர்களான அம்மாவும் அக்காவும் வற்புறுத்தி அழைத்ததால் கிளம்பினோம்  ...சிறு வயதில் பார்த்த இடம் தான் என்றாலும் அதன் பெருமைகள் அவ்வளவாக மனதில் பதிந்ததில்லை ..  அங்கு வெளி நாடுகளில் இருந்து இதை காணவே வரும் வெளிநாட்டவர்  அதன் பெருமைகளை வியந்து போற்றுவதை பார்க்கும் போது நமக்கே வெட்கமாக தான் இருக்கிறது, வெளிநாடுகளில் இருக்கும் இடங்களை  போற்றி பாராட்டும்  நாம் நம் நாட்டின் கலை பொக்கிஷத்தை போற்ற மறந்து தான் விடுகிறோம்..பிள்ளைகளுக்கும் அதை சொல்வதை தவிர்த்து விடுகிறோம்...அக்காவும் அம்மாவும் சிவகாமியின் சபதம் கதையை விவரித்து எங்களுக்கு விவரம் சொல்லி கொண்டே வந்தனர்...எவ்வளவு அரிய கலை பொக்கிஷத்தை பெற்றிருக்கிறோம் நாம் ...காலம் கடந்தாலும் நம்  தமிழர்களின் அரிய திறமையை நாமும்   நம் பிள்ளைகளுக்கும் சொல்லி புரிய வைக்க வேண்டும் என நினைத்து கொண்டோம் ...