புதன், 26 ஜூலை, 2023

 


பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 1)
Life is unpredictable
இந்த வரிகள் எவ்வளவு உண்மையானது என்பதை உணர்த்திய பயணம்✈
20 நாட்களுக்கு முன் இப்படி ஒரு விஷயம் நடக்கும் னு சொன்னால் நம்பியிருக்க வே மாட்டேன்...
என் வாழ்க்கை முதலில் அப்பா பிறகு கணவர் இப்பொழுது மகன் இப்படி ஆண்களை சார்ந்ததாகவே இருந்தது அதுவும் கணவரின் ஆளுமை மிக அதிகம் திருமணமாகி 32 வருமாகிறது இதுவரை ஒருநாள் கூட அவரில்லாமல் தனியே நான் போனதே கிடையாது அம்மா வீட்டிற்கு கூட சேர்ந்தே போவோம்... கடைக்கு போனால் கூட 10 போன் போடுவார் எங்கே போனாலும் சாயங்காலத்துக்குள் வீட்டுக்குள் வந்து டனும் இப்படி எல்லாம் இருந்தவர் இப்ப கொஞ்ச வருஷமா தான் ஷாப்பிங் போனால் அதிகம் போன் செய்வது கிடையாது 9 மணியானாலும் ஒண்ணும் சொல்வதில்லை... இப்படி இருந்தவர் திடீரென்று நீயும் மகளும் எங்கேயாவது வெளிநாடு போய்ட்டு வாங்களேன் என்றதும் சிரிச்சுட்டேன்... என்னை கிண்டல் பண்றார்னு அவர் நிஜமாவே சீரியசா சொன்னார்..மகனும் மருமகளும் ஏற்கனவே போய் வந்த இடம்  தாய்லாந்து..அதனால பையனும் ஏதாவது தாய்லாந்து  பேக்கேஜ் பாருமானு  சொன்னதும் இது கனவா நிஜமானு புரியாமல் ஷாக் ஆயிட்டேன்.... அனுப்பறாங்களோ இல்லையோ சும்மாவாச்சும் பார்க்கலாம்னு பார்த்தால் பெரிய டிராவல்ஸ் எல்லாம் கம்மியா ஆஃபர் போட்டிருந்தாலும் இடமும் ரொம்ப கம்மியா தான் போட்டிருந்தாங்க...... சரி வேற யாரையாவது பார்க்கலாம்னு  Facebook  ல 2 வருஷமா நான் ஃபாலோ பண்ற பேஜ் ல ஃபோன் பண்ணி பேசினேன் அவர் பேச்சில் நம்பிக்கை வரவே அவரிடம் நான் பார்க்க வேண்டிய இடங்களை லிஸ்ட் பண்ணி அனுப்பி வைத்ததும் அவர் பயணதிட்டமும் கட்டணமும் அனுப்பினார் கணவரிடம் காட்டியதும் உனக்கு ஓக்கேனா புரொசீட் பண்ணு ஆனா ஒரே ஒரு விஷயம் இந்த பயணத்தில் வர்ற எல்லா நல்ல கெட்ட விஷயங்களுக்கும் நீதான் பொறுப்பு னு குண்டை தூக்கி போட்டுட்டார்... சரிஓக்கே முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம் னு நினைச்சு பயண திட்டத்தை தொடங்கினோம்... தொடரும்

வியாழன், 6 ஜனவரி, 2022

பயணங்களின் பதிவுகள் ஏற்காடு 2022 (1)

  

     வருடம் தவறாமல் வரும் திருவிழா மாதிரி வருடம் தவறாமல் ஒரு டூர் போறது என்னுடைய பழக்கம்... ரெண்டு வருஷமா போக முடியாத சூழ்நிலை...ஆனால் இந்த






புத்தாண்டின்  முதல் நாளே நான் போன இடம் இந்த 2வருஷத்துக்கான சந்தோஷத்தையும் சேர்த்து  தரும்னு நினைச்சு கூட பார்க்கலை..... ஏற்காடு ஏற்கனவே 2010 ல் ஒருமுறை போய்ட்டு வந்த இடம் தான்...நார்மலா எப்பவும் போற டூர் மாதிரி தான் இருந்தது....அப்போ போனது மே மாதம்  க்ளைமேட் சில்லுனு இருந்தாலும் இந்த டிசம்பர் க்ளைமேட் தந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது... சினிமாவில் வர்ற மாதிரி பனிபடர்ந்த இடங்களும் அமைதியான சூழலும் வார்த்தையில் வர்ணிக்க முடியாது... அதுவும் 1ம் தேதி வருஷபிறப்பு அதுவுமா  அண்ணாமலையார் கோயிலில் சிவன் தரிசனமும் அதை சுற்றி பனி சூழ்ந்த மலையும் அவ்வளவு அழகாக மனதை கொள்ளை கொண்ட இடமாக இருந்தது...வாழ்க்கையில் மறக்கவே முடியாத புத்தாண்டாக அமைந்தது இந்த பயணம்......

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தோழி

ஊர் சுமையெல்லாம்
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......

திங்கள், 30 டிசம்பர், 2019

பயணங்களின் பதிவுகள் (மும்பை )2018
எந்த டூர் கிளம்பினாலும் அதுல நேரடியா கோவில்களை சேர்க்காமல் அந்த இடத்திற்கு போனதும் பக்கத்துல இந்த கோயில் இருக்கு பார்த்துட்டு போய்டலாம்னு சொல்லி கூட்டிட்டு போய்டுவேன்.....வீட்டிலேயே சொன்னால் எடுத்ததுமே வேண்டாம்னு சொல்லிடுவாங்க பிள்ளைகளும் கணவரும்......இந்த முறை சீரடி போவதை முன்பே முடிவு செய்தே போனோம்...ஏன்னா இது மருமகள் விருப்பம்... ஆகையால் முதலிலேயே பிளான் பண்ணியாச்சு...காலையிலே கிளம்பிட்டோம் போகிற வழியில் பாதை கொஞ்சமும் சரியில்லை ....அதனால் மணி 11.30 மணி தாண்டி விட்டதால் ஆரத்தி தொடங்கி விட்டது .காத்திருக்கும் நேரத்தில் ஆரத்தி திரையிடுகிறார்கள் ,....தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால் கூட்டமே இல்லாமல் மிக நிதானமாக பாபாவின் தரிசனம் பார்த்தோம் .....
... அங்கிருந்து வரும் வழியில் பக்கத்தில் தான் சனிசிக்னாபூர் எனும் சனீஸ்வரன் கோயில் என்றும் அதை பார்த்து விட்டு போகலாம் என்றும் சொன்னதுமே இன்னொரு கோயிலா என்று முகமே உம்மென்று மாறி விட்டது....இருந்தும் வேறு வழி இல்லை என்பதால் சரி என்று ஒத்துக்கொண்டனர் ....போகிற பாதை முழுவதும் அழகான வயல்வெளிகளும் கரும்பு தோட்டங்களும் நிறைந்து காணப்படுகிறது .....
.... வழி எங்கும் கரும்பு ஜூஸ் கடைகளாக இருக்கிறது....கடைகளை கலர் கலர் பலூன்கள் கட்டி ஏழு எட்டு ஊஞ்சல்கள் போட்டு கவர்ந்திழுக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள்..,செக்கில் எண்ணைய் எடுப்பது போல மாடுகளை வைத்து கரும்பு ஜூஸ் பிழிகிறார்கள் ....பார்க்கவே புதுமையாக இருக்கிறது .....ஊஞ்சலில் ஆடி கொண்டே ஆளுக்கு இரண்டு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து கிளம்பினோம்.,,,
. சனி சிக்னாபூர் .....சனி பகவான் பூமியில் வந்து இறங்கிய இடம் இது என்கிறார்கள்...ஒற்றை கல் தூண் போல நிற்கிறார் சனி,,அங்கேயும் கூட்டம் இல்லாததால் நிதானமாக தரிசனம் பார்த்து கிளம்பினோம்......அடுத்த நாள் தீபாவளியை மருமகள் குடுபத்தினருடன் மகிழ்ச்சியாய் கொண்டாடி முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்...... 😊.(நிறைவு )




ஞாயிறு, 10 நவம்பர், 2019

நிலம்கொத்தி பறவை

மரம்கொத்தி  பறவையை
கண்டிருக்கிறோம்
மண்கொத்தி பறவையையும்
கண்டிருக்கிறோம்
இன்று
புதிதாய் முளைத்திருக்கிறது
நிலம்கொத்தி பறவையொன்று ...
விவசாயியின் வயிற்றிலடித்து
அவர்களின்
வறுமையை சாதகமாக்கி
அவர்தம் நிலங்களை
பிடுங்கி தின்று
உயிர் கொத்தி தின்கிறது

பெரும்வணிகம் எனும்
நிலம்கொத்தி பறவை. ....

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

. சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....4



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....

       இந்த வாள் 2010 ல் நாங்க  ஜெய்ப்பூர் போயிருந்தபொழுது வாங்கியது. .அங்கே தெருக்களில் இதைப்போல நிறைய மாடல்களில் பல நிறங்களில் வாள்களை விற்கிறார்கள். ..அங்குள்ள வீடுகளில் இந்த ஒரு கலைபொருளை அனைவரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.. , நெடுவாள்,சின்ன குத்துவாள் சிறிய கத்தி  என பலவிதமான வகையினில் இருந்தாலும் எனக்கு பிடித்தது இந்த போர்வாள் தான். ...இதை கையில் வைத்து பார்க்கும் போது ஒரு மகாராணி உணர்வை  தந்ததால் இதை விருப்பப்பட்டு வாங்கி வந்தேன். ...கம்பீரமான இந்த வாளை பார்க்கும் போதெல்லாம்  அந்த பிங்க் சிட்டியின் அழகு கண்ணில் வந்து போகும். .....உங்களுக்கும் அங்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் இதை வாங்கி வந்து நீங்களும் மகாராஜாவாகவோ மகாராணியாகவோ மாறிவிடுங்கள் 😆😛😜😜

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....3



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
   இந்த ஷோபீஸ் நான்  சவுத்ஆப்ரிக்கா போயிருந்தபொழுது  வாங்கியது...  அங்கே அவுட்ஷ்ரோம் னு ஒரு இடம்.. அங்கே உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு போயிருந்தோம் ..அதனுடைய  முட்டை ஓடு மிக பலமாக இருக்கும்.. அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடையாது..அவ்வளவு ஸ்ட்ராங் ..முன்பெல்லாம் ஆஸ்ட்ரீசோட இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. ..இப்பொழுது சில பண்ணைகள் மட்டுமே இருக்கிறது,அங்கு யானைசவாரி போல ஆஸ்ட்ரீச் மேல் நாம  சவாரி செய்யலாம் தைரியமிருந்தால். .. அங்கு இருக்கும் கடைகளில் ஆஸ்டிரிச் முட்டை ஓடுகளால் ஆன அலங்கார பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ..அந்த இடத்தின் நினைவாக ஆஸ்ட்ரீச்  ஓட்டின் மீது செய்த  து இந்த  ஷோபீஸ்😊...இதை பார்க்கும் போதெல்லாம் அதன் மேல் செய்த சவாரி நினைவினில் வந்துபோகும்😊