வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அன்பு

அன்பின் அளவை
அளக்க முடியுமா
என்றனர் என்னிடம்
நான் உன் எடையை
சொன்னேன்......

முள் ...

கடிகார முள்ளாய்
என்னை சுற்றி வந்தாய்
அன்று
உன் பிரிவினால்
நெருஞ்சி முள்ளாய் குத்துகிறாய்
இன்று
அருகிலும் பிரிவிலும்
என்றுமே முள் தான்
நீ எனக்கு.........

வலி

அடிக்காமல் வலிக்க
வைக்க முடியுமா?
முடிகின்றதே உனது
மௌனத்தால் ..............
..

காதல்

மலர் ஒன்றை அனுப்பினேன்
என்மேல் காதல் உண்டென்றால்
சூடி கொண்டு வா
இல்லை என்றால் கையில்
ஏந்தி வா
என் கல்லறையில் வைத்திட .............

நினைவுகள்

உன் நினைவுகளே வேண்டாம் என்று
வெகுதூரம் ஓடிச்சென்று மூச்சிரைக்க
நின்று பார்கிறேன் என்முன்னே
நிழலாய் நீண்டிருகிறது
உன் நினைவுகள் ..................

தியாகம்

எப்போதும் நான் தோற்பதால்
நீ வீரன் என்று மமதை கொள்ளாதே
தோல்வியை நீ தாங்க மாட்டாய்
என்பதால் உனக்காக தோற்று
போகிறேன் நான் .........

சந்தேகம்

நோய் உள்ளவர்களுக்கு தான்
வலியாமே?
யார் சொன்னது?
உனக்கு வந்த நோய்க்கு
நான் அல்லவா வலியை
அனுபவிக்கிறேன்.................

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தாய்மை

தோளில் புத்தகபை
கையில் உணவு பை
கருவில் சுமந்தது போதாதென்று
தோளிலும் சுமக்கும்
தாய்மை...........................