வியாழன், 14 நவம்பர், 2013

சாம்பியா to இந்தியா

.மதியம் 3.15 சாம்பஸி ஆற்றின் மீது இரண்டு மணி   நேரம் ஆப்ரிக்கன் குயின் என்னும் பொழுதுபோக்கு படகில்  பயணித்தோம்...மதியம் தொடங்கிய பயணம் சூரிய அஸ்தமனம் வரை நீடித்து.,சூரியன் அஸ்தமித்தும் திரும்பி ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது.. முதலில் பயணம் சுவாரசியமாக இல்லை  ..இரு கரைகளிலும் யானைகள் குடும்பம் மற்றும் காண்டா மிருகம் ,ஒட்டகம் போன்றவற்றை பார்த்து கொண்டே செல்லலாம் ....படகில் ஏறியதில் இருந்தே எல்லோரும் குடிக்க ஆரம்பித்தனர் ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் குடித்து கொண்டே வந்தனர்....அதற்கு துணையாக சிற்றுண்டிகளும் கொடுத்தனர் ...இலவசமாக எவ்வளவு வேண்டும் வேண்டுமானாலும் வாங்கி  கொள்ளலாம் ...நாங்கள் மூவர் மட்டும் குளிர்பானம் குடித்ததை பார்த்த அவர்கள் எங்களை  வேற்று கிரகவாசி போல்  பார்த்து சென்றனர்..அங்கு எங்களுடன் பயணித்த ஒரு பெண்மணி நாங்கள் குடும்பமாக வந்ததை பெரும் அதிசயமாக கேட்டார்..அவர் அவரது நண்பருடன் வந்திருந்தார்...வெகு தூரம் சென்ற பிறகு சூரிய அஸ்தமனம் தொடங்கியது அழகிய அந்த ஆறு  சூரிய ஒளியால் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறியது ..பொன்னிறமாக மாறிய ஆற்றின் முடிவில் சூரியன் மறைய தொடங்கிய நேரம் எல்லோரும் 3,2,1 என எண்ண தொடங்கினர் பூஜ்யம் சொல்லியதும்  சூரியன் மறைவதும் ஒன்றாக இருந்தது...எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்...மிக இனிய அனுபவமாக இருந்தது..மீண்டும் கரைக்கு திரும்பியது படகு..மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு ஜோன்ஸ்பர்க் வந்தோம்...என் மகன் பள்ளியில் பிராய் எனப்படும் இரவு விருந்தை கொண்டாடினோம்..நெருப்பு மூட்டி அதை சுற்றி அனைவரும் அமர்ந்து சந்தோஷமாக பொழுதை போக்கினோம்...எங்கள் மகனுடன் மீதி நாட்களை கழித்து விட்டு இந்தியா வந்து சேர்ந்தோம் ......











மனதிற்க்கினிய அனுபவங்களோடும் மகிழ்ச்சியோடும் இனிதே முடிந்தது எங்களது தென்னாப்ரிக்கா பயணம்......