செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சில பயணங்களும் சில படிப்பினைகளும் (வயநாடு )

   கேரளாவின்  வயநாட்டில் எங்கேயும் தங்கி ரசிக்க வேண்டிய தேவையே இல்லை ...வாகனத்தில் சுற்றி வருவதே அவ்வளவு அழகான காட்சி....எங்கும் நிறைந்திருக்கும் பச்சை ..பயணம் நீண்டு கொண்டே இருக்காதா என்று நினைக்க வைக்கும்...பகலில் இதமான வெயிலும் இரவில் மழையும் பெய்கிறது அங்கு நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினோம்...அடர்ந்த காடு போல மிளகு கொடியும் காப்பி தோட்டங்களும் நிறைந்திருக்கும் பகுதியின் நடுவில் அமைதிருந்தது அவ்வீடு ...பள்ளமென இறக்கத்தில் இறங்கி செல்ல வேண்டும்  ...அங்கு இருந்தவர்கள் காரை நெடுஞ்சாலையில் விட்டு வரலாம் இரவில் மழை பெய்யும் என்றும் கார் மேலே செல்ல முடியாது என்றும் கூறினார்கள் ...அப்பொழுது கார் வாங்கி 2 வருடம் தான் ஆகி இருந்தது ...அதன் மேல் நம்பிக்கை வைத்து அவர்களிடம் எங்கள் கார் எங்கேயும் சுலபமாக ஏறி விடும் என பெருமை பீத்தலாக  சொல்லி காரை  அங்கேயே நிறுத்தினோம்...இரவெல்லாம் பெய்த மழையில் பாதை முழுவதும் சேறாகி விட்டது...கார் ஏற முடியவில்லை வெகு நேரம் முயற்சித்த பின் டிராக்டரில் கட்டி இழுத்து நெடுஞ்சாலையில் நிறுத்தினார்கள் .....ஒரு இடத்திற்கு செல்லும் போது அங்கே வசிப்பவர்களின் யோசனையை கேட்டு நடப்பது தான் நல்லது என புரிந்து கொண்ட பயணம் .......