செவ்வாய், 31 ஜனவரி, 2017

பயணங்களின் பதிவுகள் (வைகை அணை )
பயணம் சென்று வெகு நாட்கள் ஆகி விட்டது...பிள்ளைகளின் படிப்பை பொருட்டு செல்ல முடியவில்லை...எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டு போவது என் பழக்கம்...முன்பெல்லாம் லைப்ரரி சென்று பயண புத்தகம் படித்து குறிப்பெடுத்து கொண்டு போவேன்...இப்போது செல்போன் அதை எளிமையாக்கி விட்டது ...
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ஆண்டிப்பட்டி செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணினோம் ...அருகில் உள்ள இடங்களில் முதலில் பார்த்தது வைகை அணை....மதுரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்க மிக அழகுடன் நீர்நிறைந்து இருக்கும் இந்த அணை இப்போது நீர்மட்டம் வெகு குறைந்து சிறிதளவே நீர் இருந்தது.....காய்ந்து கிடந்த அணையை பார்க்கும் போது இன்னும் அடுத்த மழை வரும் வரை தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போகிறோமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியது மனதில் ..... இதற்கு நம்மால் செய்ய முடிந்த ஒரே செயல் முடிந்த அளவு நீரை சிக்கனமாக செலவழிப்போம் ...நீர் வளம் காப்போம் .
நீ பார்த்த பார்வைகொரு நன்றி 

வியாழன், 26 ஜனவரி, 2017

பயணங்களின் பதிவுகள் (வைகை அணை  )
    பயணம் சென்று வெகு நாட்கள் ஆகி விட்டது...பிள்ளைகளின் படிப்பை பொருட்டு செல்ல முடியவில்லை...எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டு போவது என் பழக்கம்...முன்பெல்லாம் லைப்ரரி சென்று பயண புத்தகம் படித்து குறிப்பெடுத்து கொண்டு போவேன்...இப்போது செல்போன் அதை எளிமையாக்கி விட்டது ...
    ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ஆண்டிப்பட்டி செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணினோம் ...அருகில் உள்ள இடங்களில் முதலில் பார்த்தது வைகை அணை....மதுரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்க  மிக அழகுடன் நீர்நிறைந்து இருக்கும் இந்த  அணை  இப்போது நீர்மட்டம் வெகு குறைந்து சிறிதளவே நீர் இருந்தது.....காய்ந்து கிடந்த அணையை பார்க்கும் போது இன்னும் அடுத்த மழை வரும் வரை தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க  போகிறோமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியது  மனதில் .....

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

        வாழ்வில் எதற்காகவும் இதுவரை  கொடி பிடித்ததோ கோஷம் போட்டதோ இல்லை...போரட்டகளம் என்பதை  தொலைகாட்சியில் வேடிக்கை பார்த்து, நாட்டில் நடக்கும் அவலங்களையும் அராஜகங்களையும் விமர்சிப்பதோடு என்னால் என்ன செய்ய முடியும் என்கிற இயலாமையோடு கடந்து செல்லும் என்னையும் இந்த போராட்ட களத்தில் இறங்கி கோஷம் போட வைத்தது எதுவென்றால் ,..... இளைய சமுதாயமே  ...

       தாங்கள் இறங்கியதோடு மட்டுமில்லாமல் எங்களையும் கைப்பிடித்து அழைத்து வந்து உங்களாலும் முடியும் என்கிற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்துள்ளனர்  இந்த மாணவ செல்வங்கள் .....இது வரை ஓட்டு போடுவது மட்டும் தான் எங்கள் கடமை என இருந்த எங்கள் மனதில் இதுவும் உங்கள் கடமை...நம் உரிமைகளை அறவழியில் போராடி பெற முடியும் என்கிற மிக பெரிய நம்பிக்கையை எங்கள் மனதில் ஊட்டிய நீங்கள் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாக்கள் ........

     முக்கியமாக சென்னை பிள்ளைகள் சமுதாய பொறுப்பற்றவர்கள் என்கிற அவபெயரை முழுவதும் துடைதெறிந்து எல்லோருக்கும் முன்னுதாரணமாய் நின்று எங்களை  தலைநிமிர்ந்து நிற்க வைத்து விட்டீர்கள் ....

      இனிவரும் காலங்களிலும் சமூக அவலங்களை எதிர்த்து  போராடும்   உங்களின் பின்னால் என்றும் நாங்கள்  துணை நிற்போம்  .....
     
    

செவ்வாய், 3 ஜனவரி, 2017

கோடிட்ட இடங்கள்......

வாழ்கை சில வேளைகளில்
வெறுமையென சில கோடுகளை
இட்டு செல்கையில்

கோடிட்ட இடங்களை
சுவாரசியம் கொண்டு நிரப்புகிறது
உன்னை பற்றிய நினைவுகள் .......