செவ்வாய், 31 ஜனவரி, 2017

பயணங்களின் பதிவுகள் (வைகை அணை )
பயணம் சென்று வெகு நாட்கள் ஆகி விட்டது...பிள்ளைகளின் படிப்பை பொருட்டு செல்ல முடியவில்லை...எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டு போவது என் பழக்கம்...முன்பெல்லாம் லைப்ரரி சென்று பயண புத்தகம் படித்து குறிப்பெடுத்து கொண்டு போவேன்...இப்போது செல்போன் அதை எளிமையாக்கி விட்டது ...
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ஆண்டிப்பட்டி செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணினோம் ...அருகில் உள்ள இடங்களில் முதலில் பார்த்தது வைகை அணை....மதுரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்க மிக அழகுடன் நீர்நிறைந்து இருக்கும் இந்த அணை இப்போது நீர்மட்டம் வெகு குறைந்து சிறிதளவே நீர் இருந்தது.....காய்ந்து கிடந்த அணையை பார்க்கும் போது இன்னும் அடுத்த மழை வரும் வரை தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போகிறோமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியது மனதில் ..... இதற்கு நம்மால் செய்ய முடிந்த ஒரே செயல் முடிந்த அளவு நீரை சிக்கனமாக செலவழிப்போம் ...நீர் வளம் காப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக