செவ்வாய், 14 செப்டம்பர், 2010

முகமூடி


உள்ளம் பூரிக்கும் மகிழ்ச்சியில்
உரத்து சிரிக்க வெட்கம்
மனதை அழுத்தும் வேதனையில்
கத்தி அழ தயக்கம்
கோபம் கொள்ளும் வேளையில்
பொங்கி எழ பயம்
இவை எதுவும் இல்லை குழைந்தைக்கு
வெளிபடுத்துகிறது எதையும்
தைரியமாக
குழைந்தகளாகவே இருந்திருக்கலாம்
முகமூடி அணியாமல் வாழ்வதற்கு.........

சனி, 11 செப்டம்பர், 2010

விநாயகர்


பட்டும் பீதம்பரமுமாய்
துண்டும் மாலையுமாய்
நேற்றைக்கெல்லாம் கவனிக்கப்பட்ட
முச்சந்தி விநாயகர்
இன்று நிற்கிறார் கவனிப்பார் இல்லாமல்
தேர்தல் முடிந்த வாக்காளர் போல் ........

வியாழன், 9 செப்டம்பர், 2010

உபதேசம் .


பேய்களும் பூதங்களும்
பொய்யென பாடம் நடத்தி
பிள்ளைகளின் பயம் போக்கிய
ஆசிரியை இரவானதும்
ஜன்னலை பார்த்து பயந்தபடி
நிற்கிறாள் பேய் வருமென ......

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பத்மவியூகம்


பத்ம வியுகமாய் சில சூழல்கள்
உள்ளே நுழைகிறோம் அலட்சியமாய்
வெளிவரும் பாதை தெரிவதில்லை
வேதனைகள் தாக்கும் போது
வெளியேற துடிக்கிறோம்
போகும்பாதை தெரியாததால்
தடுமாறி தவிக்கிறோம்
நுழைந்தால் வெளியேற
முடியாத பத்ம வியூகத்தின்
மறுபெயர் காதல் .......

சனி, 4 செப்டம்பர், 2010

ரசனை


வரிசையில் நிற்பதினால்
கடுப்பான கணவர் முகமும்
நிற்பதினால் உண்டான வலியையும்
காத்திருப்பதினால் உண்டாகும் எரிச்சலையும்
அனைத்தையும் மறக்க செய்கிறது
முன்னே நிற்கும் பெண்ணின்
தோளில் சாய்ந்து எனை பார்த்து
சிரிக்கும் குழந்தையின் பார்வையில் ......