புதன், 4 மார்ச், 2020

மொறு மொறு முறுக்கு சுட சுட தயார்

ஒரு பண்டிகை வந்தா தான் பலகாரம் செய்யணுமா என்ன?...எப்போ எல்லாம் சாப்பிடணுமுன்னு தோணுதோ அப்பவே பலகாரம் பண்ணிடனும்...முறுக்கு செய்யறது மிக பெரிய வேலையா நினைச்சு தீபாவளி வந்தா தான் செய்வேன் முன்னே எல்லாம் ஆனா இப்போ அப்படி இல்லை நினைச்ச உடனே ஈஸியா செய்து சாப்பிடறேன் அது எப்படினு உங்களுக்கும் சொல்லி தரட்டுமா இப்போ ....
தேவையான பொருட்கள்

1 கிலோ பச்சரிசி
1/4 கிலோ உளுந்து
வெள்ளை எள்ளு 2ஸ்பூன்
வேர்க்கடலை 1/2 கிளாஸ்
உடைத்த கடலை 1/2 கிளாஸ்
வெண்ணை 1 கரண்டி
பெருங்காயம் 1 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்

செய்முறை

பச்சரிசியை கழுவி ஈரப்பதம் போக ஒரு வெள்ளை துணியில் போட்டு பேன் காதுல காய வச்சிடுங்க கையில பிடிச்சு பாத காய்ந்த மாதிரி இருக்கனும் அந்த மாதிரி வந்ததும் எடுத்து பாத்திரத்துல போட்டுக்குங்க ....உளுந்தை வாணலியில் போட்டு பொன்னிறமா ஆகிற மாதிரி வருது எடுத்துக்கோங்க...அதுல சீரகம் பெருங்காயம் வேர்க்கடலை உடைச்ச கடலை எல்லாத்தையும் வருது அது கூட போட்டு மிசின் ல கொடுத்து அரைச்சு எடுத்துக்கோங்க ...அரைச்சிட்டு வந்த அரிசி உளுந்து எல்லாத்தையும் ஒண்ணா கலந்து எடுத்துக்கிட்டு சலிச்சிக்கோங்க ...
அதுல தேவையான அளவு உப்பு வெண்ணை மிளகாய் தூள் வெள்ளை எள்ளு போட்டு பிசைந்துக்கோங்க...ரொம்ப தண்ணிய விடாம கைக்கு நல்லா மெது மெத்துன்னு வர மாதிரி வந்ததும் ஒரு வெள்ளை துணியை போட்டி மூடி வச்சிடுங்க...
முறுக்கு குழாயை எடுத்து அதுக்கு உள்ளார எண்ணைய் கொஞ்சம் போட்டு நல்லா தடவி விடுங்க...இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமா எடுத்து அதுக்கு உள்ள போட்டு நல்லா மூடிட்டு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதுல எண்ணைய் தடவி முள்ளு முறுக்கு தட்டு போட்டு நல்ல பிழிஞ்சு விடுங்க....அடுப்பை பத்த வச்சு எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைங்க...எண்ணைய் காய்ந்ததும் இந்த முறுக்கை ஒன்னு ஒண்ணாக எடுத்து அதுல போட்டு நல்ல சிவந்ததும் எடுத்து தட்டுல போட்டு ஆற வச்சிடுங்க...முறுக்கை சுட சுட சாப்பிட கொஞ்சம் மெத்துன்னு இருக்கும் நல்லா ஆற வச்சு சாப்பிடுங்க அப்போ தான் மொறு மொறுனு இருக்கும் ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக