புதன், 4 மார்ச், 2020

இந்தியாவின் ஆடம்பர ஹோட்டலும் பாரம்பரிய நுழைவுவாயிலும் கொண்ட மும்பை

மும்பை ...நாம எந்த வெளிநாடு போனாலும் இந்தியாவில் இருந்து வரும்னு சொன்னதும் அவங்க முதலில் நம்மை கேட்கும் கேள்வி மும்பையில் இருந்தா என்று தான் ...அந்த அளவுக்கு இந்தியா னு சொன்னதுமே நம் தலைநகர் டெல்லியை விட எல்லோருக்கும் தெரிந்த இடம் மும்பை தான் ..அப்படிப்பட்ட மும்பையை பார்க்காம இருக்கலாமா?....அதான் கிளம்பிடேன் மும்பையை பார்க்கா ...
மும்பையின் நுழைவு சிறப்பே கடலுக்கு நடுவில கட்டி இருக்கிற அந்த பாலம் தான் ..அதோட பேர் .பாந்த்ரா வோர்லி ஸீலின்க் ...கடலுக்கு நடுவில வண்டியில போகும் போது ரெண்டு பாகமும் கடல் அலைகள் வாவ் செம அழகு ....
அடுத்து நாங்க பார்க்க போனது இந்தியாவின் நுழைவு வாயில் ....பெருமை வாய்ந்த இந்த இடம் நம் நாட்டின் வரலாற்று பொக்கிஷம்..முன்பெல்லாம் உள்ளே பார்க்க அனுமதி அளித்து இருந்தார்கள் இப்பொழுது உள்ளே செல்ல முடியாது .. நாயகன் கோபுர வாசலிலே இதை மாதிரி படம் பார்த்தவங்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும் ..கமல் சரண்யா நடந்து வரும் போது புறா நடந்து வர அந்த சீன் ரொம்ப பேமஸ் ...இப்போ வெளியே இருந்தே பார்க்க வேண்டியது தான்...
அடுத்து பார்த்தது தாஜ் ஹோட்டல்.. பார்த்தது என்றால் வெளியே இருந்து பார்த்தது ...இந்திய வரும் சுற்றுலா பயணிகள் தங்க விரும்பும் மிக பிரமாண்டமான ஹோட்டல் இது ...இதை மிக பிரபலம் ஆக்கியது மும்பை தாக்குதல் ..இங்கு நடந்த தாக்குதல் நம் மிக பெரிய தலைகுனிவு...இதை விரிவாக தெரிந்து கொள்ள ஹோட்டல் மும்பை என்னும் படம் பார்த்தல் போதும்..நடந்த விஷயத்தை கண்முன்னே பார்த்தது போல் இருக்கும் .எரிந்து போன அந்த கட்டிடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது...
அப்புறம் மும் பையிலே பார்க்க வேண்டிய இடம் னு பார்த்தால் ஷாப்பிங் ...ஷாப்பிங் னு சொன்னால் பெரிய கடைங்க இல்லை ..ரோடு கடைங்க தான் ...இந்தியால எந்த புது மாடல் வந்தாலும் முதல்ல இந்த ரோடு கடைங்களா வந்துட்டு தான் பெரிய பெரிய மாலுங்களுக்கே வரும் ..அப்புறம் பார்க்...ஷாருக்கான் அமிதாப்பச்சன் வீடு மிக அழகான நீண்ட கடற்கரை புறாக்கள் பறக்கும் கடலோரம் இவை எல்லாமே சேர்ந்தது தான் மும்பை ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக