சனி, 29 பிப்ரவரி, 2020

நாவூற வைக்கும் சூப்பர் சிக்கன் பிரியாணி

பிரியாணியில் பலவகை இருக்கு ...ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகை டேஸ்டா இருக்கும் ...தலப்பாக்கட்டு பிரியாணி பார்த்தீங்கன்னா அரிசியில் பண்ணுவாங்க அது எப்படி இருக்கும்னா குட்டி குட்டியா இருக்கும் .பிரியாணி கொஞ்சம் பிரவுன் கலர் ல இருக்கும்...சுவையா இருந்தாலும் நிறைய பேருக்கு அது பிடிக்காது ..பிரியாணின்னு சொன்னாலே அது பாசுமதி அரிசியில் பண்ற முஸ்லீம் பிரியாணி தான் ...அதுக்கு தனியா ஒரு சுவையும் மனமும் இருக்கு ...அந்த வாசனையே நிறைய சாப்பிட தூண்டும் ....சுவையான ஒரு முஸ்லீம் கல்யாண பிரியாணி எப்படி செய்யறதுன்னு பார்ப்போமா?....தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி 3 கிளாஸ்
பட்டை மசாலா கிராம்பு ஏலக்காய்
வெங்காயம் 6
தக்காளி 4
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 கரண்டி
தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன்
தயிர் 1/2 கப்
புதினா கொத்தமல்லி 2 கைப்பிடி
சிக்கன் 3/4 கிலோ
கல் உப்பு தேவையிலான அளவு
தண்ணீர் 3 கிளாஸ்
எண்ணெய் 3 கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மசாலா போட்டு தாளிக்கவும் நன்றாக பொரிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் அது வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி சிக்கனை போடவும் பிறகு பச்சைமிளகாய் தயிர் மிளகாய்த்தூள் புதினா கொத்தமல்லி கல் உப்பு என வரிசையாக போட்டு எல்லாமும் சுருங்க வதங்கி மேலே எண்ணெய் மிதந்து வந்ததும் தண்ணீரை ஊற்றவும் ..தண்ணீர் அரிசி எவ்வளவு அளவோ அவ்வளவு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அரிசியை போடவும் அரிசியும் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வேறொரு அடுப்பின் மேல் தோசைக்கல்லை போட்டு அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை தூக்கி வைத்து 15 நிமிடம் தம்மில் போட்டு வைக்கவும்...தம்மில் வைக்கும் போது மேலே ஒரு கனமான பாத்திரமோ இல்லை தண்ணீர் நிரம்பிய கிண்ணமோ வைத்து விடவும் அப்போது தான்கீழே உள்ள பதத்திற்கு ஏற்றவாறு மேல் பக்கமும் வெந்திருக்கும் ...15 நிமிடம் ஆனதும் சுவையான சிக்கன் பிரியாணி தயார் ...

சமைப்போம் சுவைப்போம் மகிழ்ந்திருப்போம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக