சனி, 29 பிப்ரவரி, 2020

மெழுகு சிலைகளும் தலைவர்களின் தத்ரூப தரிசனங்களும்

நாம இழந்த மிக பெரிய தலைவர்கள் இல்லை நாம மிக விரும்பி நெருங்கி பார்க்க துடிக்கிற பிரபலமானவர்கள் இவங்க கூட புகைப்படம் எடுத்துகிற வாய்ப்பு கிடைச்ச எப்படி இருக்கும்...ஆனா அது நாம விருப்பபடி கிடைக்காதே ...அந்த குறையை தீர்க்கிற மாதிரியான ஒரு விஷயம் தான் இந்த மெழுகு சிலை அரங்கம் ....புனே லோனாவாலா பக்கத்துல காந்தளூர்னு ஒரு இடம் இருக்கு அங்கே நிறைய மெழுகு சிலை அரங்கம் இருக்கு ..அதுல ஒன்னு சுனில் வேக்ஸ் மியூசியம் ..அது தான் அங்கே பெஸ்ட் மியூஸியம் னு சொன்னாங்க...நானும் இது வரை மியூசியம் பார்த்ததில்லை அதனால போய் பார்க்கலாமுன்னு போனோம் ...நிஜமாவே அசந்து போற மாதிரி இடம் தான் அது ...நாம நேரில் பார்க்க முடியாத பலரையும் அங்கே மெழுகு வடிவத்துல பார்த்து அசந்து போனோம் ...சும்மா ஏனோ தானோனு இல்லை ...நேரிலே பார்க்கும் போது எவ்வளவு தத்ரூபமா இருக்குமோ அவ்வளவு தத்ரூபம் இந்த சிலைகள் கிட்டேயும் ...மெழுகு சிலை வடிக்க போகிறவரர்களை முதலில் இஞ்ச் விடாம அளந்துக்கிறாங்க...ஒரு சிறு பிழை கூட இல்லாம ஒரு கரும்புள்ளியோ மச்சமோ இருந்தா அதை கூட ரொம்ப துல்லியமா அந்த இடத்துல வச்சு நேரில் பக்கத்துல அவங்க வந்து நின்னால் இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியாத அளவு அவ்வளவு துல்லியமா வடிவமைக்கிறாங்க...இந்த சில்லை பக்கத்துல நிற்கும் போது அவங்க பக்கத்திலேயே நிற்கிற மாதிரி அப்படி ஒரு பீலிங் வருது ...அன்னை தெரசா,நெல்சன் மண்டேலா ,அப்துல் கலாம்,மஹாத்மா காந்தி ,எம் ஜி ஆர் , ஜாக்கிஜான் ஜேம்ஸபாண்ட் அமிதாப்பச்சன் ரஜினிகாந்த் விஜய் .சதாம் ஹுசைன் இன்னும் நிறையபேர் எல்லாமே சிலைகள்னு சொன்னால்நம்பவே முடியாது..நம்ம பக்கத்துல இருக்கிற மாதிரியே ஒரு நிஜமான உணர்வு ...பார்த்து உண்மையிலே அசந்து தான் போனேன் நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக