சனி, 29 பிப்ரவரி, 2020

நெல்லிக்காயில் ஒரு அருமையான இனிப்பு மிட்டாய் (ஆம்லா கேண்டி )

ஒரு அருமையான வடஇந்திய இனிப்பு நெல்லிக்காய் மிட்டாய் நெல்லிக்காயியலை எவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்குனு சொல்லி விளக்க வேண்டிய அவசியமே இல்லை ..பெரிய நெல்லிக்காயை ஒரு இளமை தரும் கனி னு சொல்லலாம் ..அதை சாப்பிடறவங்களுக்கு தோலில் இருக்கிற ரத்த ஓட்டத்தை தூண்டி சுருக்கம் வராம நல்ல பொலிவோடு இருக்க வைக்கும் ...இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிட சிலருக்கு பிடிக்காது அதோட துவர்ப்பு சுவையால அதை விரும்ப மாட்டாங்க...ஊறுகாய் போட்டு வச்ச ரொம்ப நல்ல இருக்கும் ஆனா பிள்ளைங்க சாப்பிட மாட்டாங்க.. அதையே இனிப்பா பச்சடி செய்து கொடுத்தா பிள்ளைங்க நல்லா விரும்பி சாப்பிடுவாங்க .... பெரியவங்க சின்னவங்க எல்லோரும் விரும்பி சாப்பிடற ஒரு நெல்லிக்காய் டிஷ் ஷை எப்படி செய்யறதுன்னு பார்ப்போமா ....அதற்கு தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் 2 kg
சர்க்கரை 1kg
சர்க்கரை 1/2kg
செய்முறை

நெல்லிக்காய் வாங்கும் போது நல்ல பெரிய சைஸ்லகருப்பு புள்ளிக இல்லாம முதல் தரமான நெல்லிக்காயா பார்த்து வாங்கிக்கோங்க... முதல்ல நெல்லிக்காயை மண்ணு தூசி இல்லாம நல்லா சுத்தமா துடைச்சு எடுத்துக்கிட்டு அதை குக்கர்ல 2 விசில் விட்டு வேக வச்சு எடுத்துக்கோங்க ஒரு பாத்திரத்துல ஒரு கிலோ சர்க்கரையை போட்டு மூணு டம்ளர் தண்ணீர் விட்டு நல்லா கொதிக்க வச்சு ஒரு கம்பி பதம் வர அளவுக்கு பாகு வச்சு எடுத்துக்கோங்க ..
நெல்லிக்காய் வெந்து நல்ல ஆறினதும் அதுல உள்ள சுளைகளை பீஸ் பீஸா எடுத்துக்கோங்க பிரித்து எடுத்த சுளைகளை ஆறி இருக்கிற சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நாள் தொடாமல் ஊற வச்சிடுங்க
இரண்டாவது நாள் ராத்திரி அதை வடிகட்டியிலே போட்டு விட்ருங்க ..ராத்திரி முழுக்க சாறு எல்லாம் நல்ல வடிஞ்சதும் அடுத்த நாள் காலைல தண்ணி நாலா வடிஞ்சதும் பெரிய தாம்பாள தட்டுல போட்டு பரப்பி வச்சு காய வச்சிருந்த ...இதே மாதிரி நாலு நாள் காய வைக்கணும் ...தட்டு மேல ஒரு நெட் மாதிரி துணி போட்டு காய வைக்கணும் ...நல்ல காய்ஞ்சு சுருங்கி போனதும் எடுத்து ஒரு பாட்டிலே போட்டு வச்சுக்கோங்க...இதை பிள்ளைங்க முதல் பெரியவங்க வரை எப்படி போட்டி போட்டு சாப்பிடறாங்கனு பாருங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக