புதன், 18 மார்ச், 2020

உலகை உலுக்கும் கொரோனா வைரஸும் அதை தடுக்க சில வழிகளும்

அனைவருக்கும் வணக்கம்.வணக்கம் என்கிற நல்ல பழக்கம் நம் இந்தியர்களின் பாரம்பரிய சொத்து .அதை உலகம் எங்கும் எல்லோரையும் ஏற்று கொள்ள வைத்திருக்கிறது இந்த கொரோனா .அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு அனைவரும் இப்பொழுது இந்த நல்ல பழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றனர் ...யாரிடமும் கைகுலுக்காமல் அனைவருக்கும் வணக்கம் என்று சொல்வது இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முதல் வழி ..
கைகளின் மூலமே பெரும்பாலான வைரஸ் பரவுகிறது அதனால் கைகளை சுத்தமாக வைத்திருப்போம்..அடிக்கடி கைகளை கழுவி கொண்டு இருப்பதும் சானிடைசர் கொண்டு சுத்த படுத்துவதும் முடிந்த அளவு கைகளுக்கு உறை மாட்டி கொள்வதும் பொது இடங்களுக்கு செல்லும் போது கைகளால் அல்லாமல் முழங்கையின் துணையுடன் கதவை திறப்பதோ அல்லது மூடுவதோ போன்ற செய்லகளை செய்வதும் இதை தடுக்க முதல் வழி ...மூச்சு காற்றில் பரவாதவாறு முகத்தை மூடும்படி முகமூடி அணிந்து கொள்வது மிக பெரிய பயன் தரும் .பொது இடங்களுக்கு செல்லாமல் முடிந்த அளவு வீட்டின் உள்ளேயே இருக்க பாருங்கள் ...அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் ...உணவு வழக்கத்தை பொறுத்த அளவில் சிக்கனில் வருகிறது மட்டனில் வருகிறது என வரும் வதந்திகளை நம்பாமல் அரசு சொல்லும் செய்திகளை மட்டும் நம்புங்கள் சிக்கன் மட்டன் மீன் போன்ற உணவுகளை நன்கு வேக வைத்து பின் சாப்பிடவும் ...உணவில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள் .மிளகு சீரகம் போன்ற அஞ்சறைப்பெட்டி மருந்துகளையும் அடிக்கடி உண்ணுங்கள் .இது கொரோனவை அழிக்கும் என்பதற்காக இல்லை பொதுவாகவே நம் பாட்டிகள் வைத்தியம் எந்த நோயும் இன்றி வாழ சொல்லி கொடுத்த நம் அடுப்பங்கரை முதலுதவி பொருட்கள் இவை தான் ..நம் உணவு தான் நமக்கு மிக பெரிய மருந்து .முடிந்த அளவு நாம் நம் முயறிச்சியில் வைரஸ் பரவாமல் தடுப்போம்..அதையும் தாண்டி சளி இருமல் காய்ச்சல் என ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செண்டு ஒரு பரிசோதனை செய்து கொள்வது அனைவருக்கும் நலம் தரும் ..குழந்தைகள் விடுமுறை விட்டதும் வெளியில் செல்ல விரும்புவது இயல்பு தான் அவர்கள் கவனத்தி திசை திருப்பி அவர்களுடன் பேசி பழகி விளையாடி கவனத்த்தை ஈர்த்து வெளியில் செல்ல விடாமல் தடுப்பது பெற்றோரின் கடமை..வயதானவர்களும் கோவில் குளம் என்று சுற்றாமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்துங்கள் .. குழந்தை என்றும் வயதானவர்கள் என்றும் பணக்காரன் என்றும் ஏழை என்றும் நோய்க்கு தெரியாது ..எனக்கு வராது என்று யாரும் அலட்சியத்துடன் இருக்காமல் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நோயில் இருந்து நம்மை கொள்ளலாம் .எச்சரிக்கையுடன் இருப்போம் வைரஸை வெல்லுவோம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக