சனி, 7 மார்ச், 2020

தேவதை ஒன்று பூமியில் பிறந்தது 
வண்ணங்கள் பல கொண்ட
 அழகிய சிறகோடு 
தந்தையென்றும்  தமயனென்றும் 
மாமனென்றும் 
காவல் காப்பதாய்  எண்ணி  
சிறகினை பிடித்து கொண்டதில் 
பறப்பென்பதே தெரியாதது அத்தேவதைக்கு 
மணமுடித்து கொடுத்த இடத்திலும் 
சிறகுகள் கைமாறி சென்றது 
குடும்பமென்றும் பிள்ளைகள் என்றுமானதில் 
சிறகுகள் மறந்தே போனதே அத்தேவதைக்கு 
இறுதியாய் தானொரு தேவதையென 
உணராமலே இவ்வுலகை  விட்டு போனது 
அந்த அழகிய தேவதை ....
   

தேவதைகளின் சிறகினை முறிக்காமல் வலிமையோடு பறக்க வைப்போம் இனிவரும் காலங்களில் ...அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக