
உள்ளம் பூரிக்கும் மகிழ்ச்சியில்
உரத்து சிரிக்க வெட்கம்
மனதை அழுத்தும் வேதனையில்
கத்தி அழ தயக்கம்
கோபம் கொள்ளும் வேளையில்
பொங்கி எழ பயம்
இவை எதுவும் இல்லை குழைந்தைக்கு
வெளிபடுத்துகிறது எதையும்
தைரியமாக
குழைந்தகளாகவே இருந்திருக்கலாம்
முகமூடி அணியாமல் வாழ்வதற்கு.........