திங்கள், 10 மார்ச், 2014

இன்று போல் நினைவிருக்கிறது....
//உனக்கு பிடித்த ஜாதிமல்லி சூடினால் 
தலை வலிக்குமென்று கூறி எனக்கு நீ சூடியதும்.//...
உப்புமாவின் அடிபிடித்த பாகம் தான் 
பிடிக்குமென்று கடைசியாக உண்டதும் //....
//ஜன்னலோர இருக்கை குளிருமென்று
என்னை அமர வைத்து 
தூர அமர்ந்து ரசித்து பயணித்ததும்//..... 
//நாள் முழுவதும் உழைத்து களைத்தாலும்
மெத்தையில் படுத்தால் 
தூக்கம் வராது என்று கூறி
என்னை உறங்க வைத்து
தரையில் தூக்கமின்றி புரண்டதும் //.....
//புது செருப்பு கால் கடிக்குதென எனக்களித்து
பழயதை  மாட்டி நீ  நடந்ததும்//....
//புது புடவை கன்னி பெண்கள் 
உடுத்த வேண்டுமென எனக்குடுத்தி
 அழகு பார்த்ததும்//....
இப்பொழுது  தான் புரிகிறது
 அத்தனையும் தியாகங்கள் என  ..
இத்தனை வயதாகியும்  
எத்தனை முயன்றும் 
கற்று கொள்ள முடியவில்லை 

""அம்மா 

உன் போல் விட்டு கொடுப்பதே தெரியாமல்
விட்டு கொடுக்கும் கலையை .... 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக