சனி, 3 ஏப்ரல், 2010

குணம்

முப்பதாயிரம் கொடுத்து
மூஞ்சுறு போல் நாய் வாங்கி
நடு வீட்டில் வளர்த்து
அது எச்சிலையும் கழிவையும்
முகம் சுளிக்காம அள்ளி
பெருமையோடு காத்திடுவான்
உண்ணாம உறங்காம
கருவிலே உன்னை காத்து
பசியோட பாடுபட்டு
நீ வச்ச மிச்சமெல்லாம்
நாயை போல தின்னு
உன்னை பொன்னு போல
காத்து வளர்த்த
உன் அன்பு தாயை
எழுந்து போய் கழியலைன்னு
தனி குடிசையில படுக்க வச்சான்
நாகரீக உலகமையா
வெகு நாசமான உலகமையா........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக