சனி, 6 நவம்பர், 2010

ஈரம்


அரவமின்றி வந்திறங்கியது
அந்த உடல்
அழுது அரற்ற ஆளில்லை
கதறி அழுவோர் யாருமில்லை
ஆட்டோவில் வந்திறங்கி
ஒதுங்கியபடி நின்றனர்
ஒப்பாரி வைத்து அழுவது
நாகரீகம் இல்லையென
கண்ணீரை கைகுட்டையால்
ஒற்றி எடுத்தனர்
கடிகாரத்தை பார்த்து கொண்டே
பிணம் தூக்க காத்திருந்தனர்
ஊர் திரண்டு புலம்பி அழுது
வழியனுப்பி வைத்ததோர் காலம்
இன்று வெப்பமடைந்து காய்ந்து போனது
பூமி மட்டுமில்லை ........
ஈரம் இல்லாத மனித இதயங்களும் கூட ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக