வியாழன், 16 டிசம்பர், 2010

பிம்பங்கள்


காய்ந்த சருகாய் மனதில்
மக்கி அழிந்து போகின்றன
சில முகங்கள்
தேவை படுகின்ற பொழுதினில்
தோண்டி எடுத்து தேடி அலைகின்ற
வேளையிலும் நினைவினில்
வருவதில்லை அவர்களின் பிம்பங்கள் ...

தேவை இல்லையென மனதின்
ஆழத்தில் புதைத்து
பல நினைவுகளை போட்டு
அழுத்தி பூசி மொழுகினாலும்
மேலெழும்புகின்றன சில பிம்பங்கள்
பூமியில் புதைக்கப்பட்டும்
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் போல ......

8 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை
    &
    "நந்தலாலா" இணைய இதழ்,
    www.nanthalaalaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. காய்ந்த சருகாய் மனதில்
    மக்கி அழிந்து போகின்றன
    சில முகங்கள்
    தேவை படுகின்ற பொழுதினில்
    தோண்டி எடுத்து தேடி அலைகின்ற
    வேளையிலும் நினைவினில்
    வருவதில்லை அவர்களின் பிம்பங்கள் ...

    உண்மை சுஜா..
    கவிதை அருமை.. வாழத்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தேவை இல்லையென மனதின்
    ஆழத்தில் புதைத்து
    பல நினைவுகளை போட்டு
    அழுத்தி பூசி மொழுகினாலும்
    மேலெழும்புகின்றன சில பிம்பங்கள்
    பூமியில் புதைக்கப்பட்டும்
    மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் போல ...... ////

    உண்மை... மனதில் ஆழமாய் புதைந்த நினைவுகள் என்றும் அழிவதில்லை...

    பதிலளிநீக்கு
  4. நன்றி...தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வைகறை .....

    பதிலளிநீக்கு