செவ்வாய், 11 ஜனவரி, 2011

புகைப்படம்


இறந்து போன அம்மாவின்
நகைகள் எல்லாம்
அண்ணியின் கழுத்தை அலங்கரித்தன ....

புடவைகள் எல்லாம் அண்ணியின்
பீரோவில் அழகாய் அடுக்கப்பட்டன ....

அம்மாவின் சொத்து பத்திரங்கள்
அண்ணாவின் பெட்டியில் பதுங்கின ...

பாட்டியின் கட்டிலையும் பீரோவையும்
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து கொண்டனர்
அண்ணனின் பிள்ளைகள் ......

அம்மாவின் புகைப்படமொன்று
தரப்பட்டது என்னிடம்
இறந்தவர்களின் புகைப்படம்
வீட்டில் மாட்ட கூடாதென்ற விளக்கத்துடன் .......

11 கருத்துகள்:

  1. ரொம்ப நல்லா இருக்கு, அழகான கவிதை...

    பதிலளிநீக்கு
  2. அருமை

    நமக்கு நிணைவுகளே பொக்கிஷம் அதுவே போதும்

    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  3. கவிதை நல்லாயிருக்குங்க ஆனா உறுத்தலான யதார்த்தம்.... பாராட்டுக்கள்.

    உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வேலு ....பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி கருணாகரசு சார் .....விமர்சனகளை தொடருங்கள் .....உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் .....

    பதிலளிநீக்கு
  6. வலிகளோடு சேர்த்து அழகாய் எழுதி இருக்கின்றீர்..
    நல்லா இருக்குங்க ... தொடந்து கலக்குங்க

    பதிலளிநீக்கு