வெள்ளி, 21 ஜனவரி, 2011

அம்மா

உற்சாகமாய் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர் அனுவும் அவளது தோழி சுனிதாவும் .தன் தாயை தோழிக்கு அறிமுகப்படுத்தும் ஆவலில் அனுவும் தன் ஆத்மார்த்த கதாநாயகியான அனுவின் தாயை பார்க்க போவதில் சுனிதாவும் மிக ஆவலாக இருந்தனர் ...

அனுவுக்கு தன் தாயை பற்றி மிகுந்த பெருமிதம்உண்டு.சமையலில்,கைவேலையில், வெளிவேலைகளில்,தன் சிநேகிதிகளுடன் தோழி போல் பழகுவதில்,தன் தாய்க்கு இணை யாருமில்லை என பெருமிதம் கொண்டவள் அவள் ...

வீடு வந்து சேர்ந்ததும் தோழியை அமர வைத்து விட்டு தாயை தேடி போனாள் அனு.சுனிதா வீட்டை சுற்றி நோக்கினாள். அனு அம்மாவின் கைவண்ணத்தில் அழகாய் நேர்த்தியாக அலங்கரிக்க பட்டிருந்தது. அனுவின் அம்மா போல் அருமையாக சமைத்து தோழிகள் அனைவருக்கும் அன்பாக கொடுத்து அனுப்பும் மனம் யாருக்கும் வராது என் எண்ணினாள் சுனிதா ..சுனிதா தாய் இல்லாத பெண் ....

அனுவின் தாய் வந்ததும் சுனிதா புன்னகையுடன் உற்சாகமாக "ஹாய் ஆன்ட்டி" என்றாள்.ஹாய் என்று மெல்லிய புன்னகையுடன் எதிரில் அமர்ந்து நலன் விசாரித்தாள்..சிறிது நேரத்தில் உட்புறமாக சென்று இருவருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்தாள்..பின் உள்ளே சென்றவள் வரவேயில்லை ..சுனிதாவுக்கு சப்பென்று ஆகி விட்டது ..தோழியை போல் பழகுவாள் என எதிர்பார்த்து வந்தவள் அவளது இயல்பை பார்த்ததும் சுருங்கி போனாள ..சிறிது நேரம் கூட இருக்க பிடிக்காமல் உடனே கிளம்பி விட்டாள்..

அனுவுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது ..தன் தாயின் இன்றைய நடவடிக்கை
புரியாமல் தவித்தாள் அவள் ..தாயின் அருகில் வந்து கோபத்துடன் காரணம் கேட்டாள் அனு .புன்னகையுடன் பதிலளித்தாள் அவள் தாய் .."இதோ பார் அனுமா அவள் தாய் இல்லாத பெண் என்னை தன் கதாநாயகியாக நினைப்பதாக நீயே பல முறை கூறி இருக்கிறாய் ..இன்று அவளிடம் நான் தோழி போல் நெருக்கமாய் பழகினால் அவளுக்கு என்மேல் இன்னும் நேசம் அதிகமாகும் ..தன் தாய் இல்லாத சோகமும் .உன் தாயை பற்றிய பெருமையும் சேர்ந்து அவளுக்கு உன்மேல் பொறாமையை உண்டு பண்ண கூடும் அதன் காரணமாக உங்கள் நட்பில் விரிசல் உண்டாகலாம் ,அதனால் தான் நான் அப்படி நடந்து கொண்டேன்.இதனால் அவள் என்னை பற்றி தவறாக நினைத்தாலும் பரவாயில்லை ..அவள் மனதில் ஏக்கமும் பொறாமையும் உண்டாக நான் காரணமாக வேண்டாம் என்று தான் விலகி இருந்தேன் ..உங்கள் நட்பு என்றும் இது போல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் .என்று கூறிய தாயை இன்னும் அதிக பெருமையோடு பார்த்து ரசித்தாள் அனு ....

4 கருத்துகள்:

  1. தாய் மனசு.... தாய் மனசுதான்... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை.. மேலும் எழுதுங்கள் சுஜாக்கா...

    பதிலளிநீக்கு
  3. சூப்பருங்க .. அம்மாவின் மனசு அப்படியே உங்கள் வரிகளிலும் ...

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அருமை அருமை நல்ல கதை வாசித்த அனுபவம்

    பதிலளிநீக்கு