திங்கள், 7 மார்ச், 2011

பெண்விடுதலை


அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும் உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

7 கருத்துகள்:

  1. உண்மை நிலவரம் இது தான் . வாழ்த்துக்கள் ..உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் ..:)

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை.மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. >>>மகளிர் தின பட்டிமன்றத்தில்
    மேடை ஏறி பெண் விடுதலை
    பற்றி முழக்கமிட .........

    ஹா ஹா காமெடி டச்

    பதிலளிநீக்கு