திங்கள், 14 மார்ச், 2011

முதலாளியம்மா


அவர்கள் இருவருக்கும்
ஒரே விதமான உரிமைகள்
ஏசி காரில் இருவருக்கும்
சொகுசு பயணங்கள் உண்டு
ஆடை அலங்காரங்கள்
குறைவில்லாமல் உண்டு
தேவைக்கு அதிகமாகவே
வித விதமான உணவுகள் உண்டு
இருவருக்குமே முதலாளியின்
படுக்கையறையில் இடமுண்டு
இருவரையுமே தன் அந்தஸ்தின்
அடையாளம் என்பார் முதலாளி
இருவருமே அவரை எதிர்த்து பேசுவதில்லை
அவர் சொல்லுக்கு அடங்கி
நடப்பது தான் இருவருக்கும் வேலை
அந்த இருவரில் ஒருவரை மட்டும்
முதலாளியம்மா என்றும்
மற்றொருவரை ஜிம்மி என்றும்
பெயர் சொல்லி அழைப்பதுண்டு........

8 கருத்துகள்:

  1. வித்தியாசமான சிந்தனை...வித்தியாசமான கவிதை... அருமை ...

    பதிலளிநீக்கு
  2. கவிதைக்கு பொருத்தமான படம்... கவிதை ரொம்ப நல்ல இருக்குங்க

    பதிலளிநீக்கு
  3. மாறுபட்ட சிந்தனை... அருமை!!

    வருகை தாருங்கள் நந்தலாலா இணைய இதழுக்கு!!

    பதிலளிநீக்கு
  4. நன்றி நந்தலாலா இணைய இதழுக்கு ......

    பதிலளிநீக்கு
  5. >>>மற்றொருவரை ஜிம்மி என்றும்
    பெயர் சொல்லி அழைப்பதுண்டு......

    இது செம

    பதிலளிநீக்கு
  6. நல்ல கவிதை! வேறென்ன சொல்ல!

    பதிலளிநீக்கு