சனி, 19 மார்ச், 2011

மனம்

பிள்ளைகள் படிக்கவில்லை என்றால்
நான் கற்பிப்பதில் குறை என்கிறாய்
வேலையாட்கள் பணிபுரியவில்லை என்றால்
நான் கண்காணிப்பதில் குறை என்கிறாய்
தொழிலில் நீ தோல்வியுற்றால்
என் ஆலோசனையில் தவறென்று சொல்கிறாய்
குடும்பத்தில் பிரச்சனைஎனில்
என் கட்டுகோப்பில் குறை என்கிறாய்
என் சமையல் ருசிக்கவில்லையெனில்
என் கவனத்தில் குறைஎன்கிறாய்
எவ்வளவு குறைகள் நீ கூறினாலும்
உன் விஷயத்தில் நிறை தான் எனக்கு
நீ என்பதே எதுவுமில்லை
நான் தான் உனக்கு எல்லாமே என்று ......

10 கருத்துகள்:

  1. பின்னீட்டீங்க போங்க

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. உங்க எல்லா கவிதைகளிலுமே இதுதான் டாப் கிளாஸ்.. வெல்டன். மேடம்

    பதிலளிநீக்கு
  3. இந்த “மனம்” ”மணத்தில்” ஆனதா?
    இதன் ஆழம், பிற உறவுகளுக்கும் பொருதுவதாய் உள்ளது (ஆண்-பெண் / பெண்-பெண் / ஆண்-ஆண் என அனைத்திற்கும்) அருமை!

    நட்புடன்,
    விஜய் :-)

    பதிலளிநீக்கு