வெள்ளி, 1 ஜூலை, 2011

கட்டளைகள்

காதலித்த பெண்ணை கரம் பிடிக்க கட்டளைகள் இடுகிறாய்.......
திருமணமான பின்
உறவெல்லாம் உன் விருப்பப்படி
நட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும்
சொந்தமெலாம் நீ சொன்னவரிடம் மட்டும்
எல்லாமே உன் விருப்பப்படி என்றால்
அவளுடைய மூளையை
என்ன செய்வது ......?....ஓ....
பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி
செய்வாயோ தாலி ........?

8 கருத்துகள்:

  1. >>பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி
    செய்வாயோ தாலி ........?

    எதுக்கு இம்புட்டு கோபம்?

    பதிலளிநீக்கு
  2. >>உறவெல்லாம் உன் விருப்பப்படி
    நட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும்
    சொந்தமெலாம் நீ சொன்னவரிடம் மட்டும்

    சுயம் தொலைத்த ஒரு பெண்ணின் வலிகள்

    தேடிடும் மாற்று வழிகள்

    பதிலளிநீக்கு
  3. //பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி
    செய்வாயோ தாலி // நன்றாயிருக்கிறது சிந்தனை.

    பதிலளிநீக்கு
  4. பெண்ணுருக்கும் கயவர்களுக்கு ஓர் சாட்டை அடி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. இப்படி ஒரு கவிதையின் “பாட்டுடைத் தலைவனாய்” நான் இருக்காமல் இருக்க முயல்வேன்...

    பதிலளிநீக்கு