செவ்வாய், 14 மார்ச், 2017

அம்மாவின் எழுபதாவது பிறந்தநாளைக்கு என்ன பரிசளிப்பது என்று சற்றே குழப்பமாக இருந்தது ...எது அவர்களுக்கு சந்தோஷம் தரும் என யோசித்து பார்த்த போது ஒரு யோசனை வந்தது....அவர்களது அப்பா வைத்த தென்னை மரத்தை பற்றி இன்றும் அம்மா   பெருமையாக பேசி கொண்டு இருப்பார்கள்...அது போல் இவர்களது கையால் மரம் நாளைய தலைமுறையினர் இதை பற்றி பேசி இவரை நினைவில் வைத்து கொள்ள வகைசெயயலாமே என்று முடிவு செய்து அதற்கு தேவையான மரகன்றுகள் உரம் எல்லாம் வாங்கி சென்று பரிசளித்தோம் ...உண்மையாகவே அம்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் ... அம்மாவின் பிறந்தநாள் அன்று அவரது கைகளாலே மரங்களை நட செய்தோம் ...அவருக்கு மிக பிடித்த விஷயத்தை பரிசளிததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக