செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பயணங்களின் பதிவுகள் ஒகேனகல் மசினகுடி ....2






மே மாதம் மட்டுமே பெரும்பாலும் பயணம் செல்லும் நாங்கள் இந்த மாதம் சென்றது என் மகனால்...அவன் நண்பர்களுடன் செல்ல ஏற்பாடு செய்திருந்த டூரில் எங்களையும் சேர்த்து கொண்டான்...பிள்ளைகள் போகும் பயணத்தில் எப்படி போவது என்று தயங்கிய எங்களை .... பிள்ளைகள் தயக்கமே இல்லாமல் சேர்ந்து போகலாம் என்று உற்சாகமாக சொன்னார்கள்....
முதலில் சென்னையில் இருந்து தருமபுரி சென்று ஒகேனகல் சென்று சேர்ந்தோம்....மெயின் அருவி பரிசல் சவாரி என்று ஏற்கனவே இரண்டு முறை போன இடம் தான் ...இந்த முறை வித்தியாசமான அனுபவமாக இருந்தது ...மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக போவதால் பரிசலை சினி பால்ஸ் இருக்கும் பக்கம் மட்டுமே இயக்குகிறார்கள்....அதுவும் புதுவிதமாக அழகாக இருக்கிறது ....பரிசலில் பயணித்து அங்கிருந்து அருவி விழும் அழகை ரசித்து பின் சினி பால்சில் குளித்து மாலை வரை இளைப்பாறி பின் பரிசலில் திரும்பினோம் ...சினி பால்ஸ் அழகான சிறிய அருவியாக இருந்தாலும் நீர் விழும் வேகம் அதிகமாகவே இருக்கிறது .....எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விடுவதும் சமைத்து தருவதையும் அங்குள்ளவர்கள் சுயதொழிலாக செய்து வருகிறார்கள்....விருப்பமுள்ளவர்கள் அவர்களை அணுகலாம் ......குளித்து சாப்பிட்டு அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினோம்......தொடரும்

1 கருத்து: