செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பயணங்களின் பதிவுகள் (ஒக்கனகல் மசினகுடி )

பயணங்களின் பதிவுகள்





சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு டூர்....சென்னையில் இருந்து ஒகேனக்கல் அங்கிருந்து மசினகுடி மீண்டும் சென்னை .....நான்கு நாட்கள் பிளான் செய்து கொண்டோம்.....
பயணம் செல்ல முதலில் வேண்டியது மனது .... வீட்டை பூட்டும் போதே நம் பிரச்சனைகளையும் கவலைகளையும் சேர்த்து பூட்டி விட்டு கிளம்புங்கள்....வந்துதும் மீண்டும் புத்துணர்வோடு சுமக்கலாம் ....ஒரு இடத்திருக்கு பயணம் போகும் என்பது போய் சேரும் இடம் மட்டும் அல்ல போகும் பாதை கூட தான்...அதை மனதில் வைத்து கொண்டு பயணியுங்கள் .....முன்பெல்லாம் இரண்டு வழி பாதை தான் அதில் வழி முழுவதும் மரங்கள் , கடைகள்.... எங்கு வேண்டுமென்றாலும் நின்று விரும்பியதை வாங்கி கொண்டு மரநிழலில் ஓய்வெடுத்து கொண்டு சென்ற அந்த பயணங்கள் தான் இனிமை....இப்போதெல்லாம் நான்கு வழி பாதை என்றாலும் வறண்டு போன மரங்கள் அற்ற கடைகள் அற்ற அந்த பாதைகள் பிடிப்பதேயில்லை ....முடிந்த அளவு மாற்று பாதைகளை தேடுவதே என் வேலை....
முன்பு பல விதங்களில் மேப் வாங்கி வைத்திருப்பேன்...போகும் வழியை அதில் ஸ்கெட்ச் செய்து வைத்து கொண்டு பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து கொண்டே வருவேன்....இப்போ அறிவியல் அதை எளிதாக்கி விட்டது ...கூகுளே எல்லா இடத்திற்கும் எளிதாக வழி காட்டி விடுகிறது ....கூகுளின் உதவியோடு இம்முறை கிளம்பினோம்...முதலில் ஒக்கேனக்கல்.......தொடரும்

1 கருத்து: