வியாழன், 16 பிப்ரவரி, 2012

அழகோ அழகு .......

புதியதாய் பூத்த மலரின்
அழகை கண்டு ரசித்த நாளில்
இது தான் உலகிலேயே அழகென்று
எண்ணி வியந்தேன் ....

பௌர்ணமி நிலவின் ஒளி
விழுந்த கடல் அலைகளை
வெள்ளியின் உருகலாய்
பார்த்த அன்று இதுவன்றோ
அழகென்று சிலிர்தேன் ...

உச்சி மலையின் மீது
சில்லென்ற பனிகாற்றில்
மேக கூட்டத்தின் உள்
நடக்கையில் இதைவிட அழகுண்டா
என்று எண்ணி ரசித்தேன் ....

பார்த்து வியந்து சிலிர்த்து ரசித்த
காட்சிகளின் அழகெல்லாம் தோற்றது
இதழ் கடித்து நீ சிரித்த ஒற்றை சிரிப்பினில் .......

2 கருத்துகள்: