சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா சிறப்பு பதிவு 2 (october 3/2016)
TIME TRAVEL

1991 ஆம் ஆண்டு..கல்யாண கனவு காணும் முன்பே கல்யாணம் ...

அப்போது 19 வயது எனக்கு...அவர்க்கு 26....கோபகுணம் கொண்ட அவரின் பேச்சை மீறி எனது அக்காவுடன் சினிமாக்கு கிளம்பி செல்லும் போது கோபத்தில் பிரிதிவிராஜ் சம்யுக்தையை கடத்தியது போல என்னை ஆட்டோவில் கடத்திகொண்டு சென்றார் அவர்...
என் அப்பாவும் தம்பியும் ஒரு வண்டியில் துரத்தி கொண்டு வர,,,அவர் அண்ணன் ஒரு பக்கம் துரத்தி வர இவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி கொண்டு சென்றது இன்று நினைத்தாலும் நம்ப முடியாத தருணங்கள்....

ஆட்டோவை பல்லாவரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து பஸ் ஏறி சூணாம்பேடு என்கிறஇடத்தில இருந்த அவரது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்... அன்று இரவே திருமண ஏற்பாடு செய்து மறுநாள் காலை ரெஜிஸ்ட்டர் ஆபீசில் 5 ரூபாய் கட்டி நடந்தது ரெஜிஸ்டர் .. அருகில் இருந்த ஒரு சிறிய கோவிலில் நண்பர்கள் இருவர் முன்னிலையில் மாலை மாற்றி தாலி கட்டி நடந்தது எங்கள் திருமணம்.....சென்னையில் எங்களை தேடிய போலீஸ் அவர் நண்பர்களை பிடித்து அடித்த கதையை இன்றும் அவர் நண்பர்கள் சொல்லி சிரிப்பார்கள்....சென்னை திரும்பிய எங்களை பிடித்த போலீஸ் DC இவர் கட்டிய தாலியை கழற்றி கொடுக்கும்படி என்னை மிரட்டியதும் ,,,பின்னர் வாழ்வில்நல்ல நிலையில் எங்களை பார்த்தது அவரே எங்களை பாராட்டியதும் என்றும் நினைவில் இருந்து அகலாத சித்திரங்கள்.....
 — remembering someone very special with Saidai Damu.


2 கருத்துகள்:

  1. நாடோடிகள் கதையை சசிகுமார் உங்க வாழ்விலிருந்து எடுத்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  2. என் கதையே பெரும் கதை அதில் இருந்து பல கதைகள் எடுக்கலாம் ....

    பதிலளிநீக்கு