சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா சிறப்பு பதிவு 5(october 3/2016)
TIME TRAVEL

1994.....தெருவில் எல்லோரையும் மயக்கிய அழகு பேரனை கண்டு அவர் அம்மாவும் அப்பாவும் மயங்கி போயினர்....நாம் கொண்டாட வேண்டிய பேரனை ஊர் கொண்டாடுவதா என்று கோபம் களைந்து மகனையும் பேரனையும் வீட்டுக்கு அழைத்தனர்....என்னை சேர்த்து கொள்ள அவர்களுக்கு காலஅவகாசம் தேவைப்பட்டது....ஏனென்றால் காதல் அவர்களுக்கு புதிது...என் அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் என்பதால் அவர்கள் எங்களை புரிந்து கொண்டு உடனே ஏற்றுகொண்டனர்...

இதற்கிடையில் இவர் நண்பர்கள் இருவரின் துணையுடன் சொந்தமாக கடை தொடங்க முயற்சித்தார்....சிறிய அளவில் முதலீடு செய்து மூவரும் சேர்ந்து ஒரு சிமெண்ட்கடை நடத்த தொடங்கினர்....அப்ப்போதெல்லாம் அவ்வளவு கடைகள் இல்லாததால் வியாபாரம் மிக சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பித்தது.....
 — with Saidai Damu.


2 கருத்துகள்:

  1. 3 வது ஃபோட்டோ ல நம்ம சேகர் ஏன் முகத்தை அவ்வளவு விறைப்பா வெச்சிருக்காரு? குழந்தை இருந்தும் கூட ?

    பதிலளிநீக்கு
  2. அப்போ அவரு ரவுடி இல்லையா?...அப்படி தான் முகத்தை வச்சுக்கணும் ....

    பதிலளிநீக்கு