திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 20
TIME TRAVEL

2010....எனக்கு பயணங்கள் மிக பிடிக்கும் ...ஆனால் அவர் பயணங்களையே விரும்பாதவர்...வீடு தான் சொர்க்கம் அவருக்கு ...திருமணம் ஆகி பல வருடம் கழித்து தான் பயணங்கள் எனக்கு பிடிக்கும் என்பதை அவருக்கு புரிய வைத்தேன்...அதற்கு பின் சில பயணங்கள் போனதும் அவருக்கும் அதில் ஆர்வம் வந்து விட்டது...நிறைய பயணங்கள் செய்ய ஆரம்பித்தோம்...அப்படி போன ஒரு பயணத்தில் தான் மிக பெரிய விபத்து நடந்தது ...ஏற்காட்டில் இருந்து இறங்கி வரும் வேளையில் வாகனம் கவிழ்ந்து பள்ளத்தில் விழ வேண்டிய வண்டி சிறிய தடுப்பினால் தடுக்கப்பட்டு உயிர் பிழைத்தோம் ,,,அன்று எனக்கும் மகனுக்கும் காயம் பட்டது...அவருக்கும் மகளுக்கும் காயம் எதுவுமில்லை...அன்று அவர் தோளில் என் கைபையை மாட்டி கொண்டு எங்களுக்கு அடிபட்டதை தாங்க முடியாது பரிதவிப்போடு என்னுடனே அலைந்தது மனதில் உறைந்த சித்திரத்தில் ஒன்று .....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்: