வியாழன், 8 செப்டம்பர், 2011

அடையாளம் தொலைத்தவள்

அலுவலகம் செல்லும்
கணவனின் கழுத்தில் தொங்குகிறது
தான் இன்னாரென்று அறிவிக்கும்
அடையாள அட்டை .....

பள்ளி செல்லும் பிள்ளையின்
கழுத்தினில் அவன் யாரென்று
கூறும் அடையாள அட்டை .....

மழலையர் வகுப்பினில் தவழும்
குழந்தையின் கழுத்திலும் அவளைப் பற்றி
தகவல்களை பற்றிய அடையாள அட்டை ...

அவர்கள் வீட்டினில் கட்டி போடப்பட்டு இருக்கும்
நாயின் கழுத்தினிலும் ஓர் அடையாள அட்டை
அதனை பற்றிய விவரங்களோடு .....

அவரகளுக்காகவே நாள்முழுக்க பாடுபட்டு
அவர்களை எல்லாம் அன்போடு
பாதுகாக்கும் அந்த வீட்டு பெண்ணிடம் மட்டும்
எந்த வித அடையாளமுமில்லை
தானென்ற அடையாளம் தொலைத்தவள் அவள் .....

விசித்திர மனம்

உன் முகத்தில் விழிப்பதில்லை
உன் நிழல் விழும் இடங்களிலும் நிற்பதில்லை
உன் பார்வையில் படுவதில்லை
உன்னை எண்ணி பார்க்க போவதுமில்லை
நீ பேசினாலும் மறுபேச்சு பேசுவதில்லை
என்றெல்லாம் சபதமேற்றபடி
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உனக்காக .........