செவ்வாய், 16 ஜூன், 2015

.
               ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை 
               சான்றோன் எனக்கேட்ட தாய் ....  

              என் மகன் ...மழலை பருவத்தில்  அவனது ஆச்சி விளையாட்டாய் சொன்ன பைலட் ஆகணும் என்கிற வார்த்தையை துரத்தி பிடித்தவன்....சிறுவயதில் யார் கேட்டாலும் நான் பைலட் ஆக போகிறேன் என்பதே அவனது  பதிலாக இருக்கும்...வளர் பருவத்தில் கூட அவனது சிந்தனையை சிதற விட்டதோ மாற்றியதோ  இல்லை ...அவனுகென்று ஆசை வைத்து கொள்ளாமல் வற்புறுத்தலுமின்றி  எங்கள் கனவுகளை தன கனவாக மாற்றி துரத்தியவன்  ....கண்ணுக்குள் வைத்து வளர்த்த மகன் பக்கத்து இடங்களுக்கு கூட தனியே அனுப்பியது இல்லை அப்படிப்பட்டவனை முதன் முறையாக பிரிந்து வெளிநாடு அனுப்பி வைத்து கலங்கி நின்ற எங்களை தேற்றி சென்றவன்....தடைகளை தாண்டி தனிமையில் தடுமாறாமல்  தனது படிப்பை  வெற்றிகரமாக முடித்து  கமர்ஷியல் பைலட் (commercial pilot )பட்டம் பெற்று திரும்பும் எனது மகனை மனதார வாழ்த்துங்கள் தோழர் தோழிகளே........ .....

வெள்ளி, 12 ஜூன், 2015

சில பயணங்களும் சில நினைவுகளும் ....(.2007..ஆக்சிடென்ட் அனுபவம் )
நண்பர்கள் இருவரின் குடும்பத்துடன் ஏற்காடு மலைக்கு டெம்போ டிராவலர் வண்டியி டூர் சென்று இருந்தோம் ... ... இரண்டு நாட்கள் மிக சந்தோஷமாக முடிந்தது ... மூன்றாம் நாள் மலையில் இருந்து இறங்கி கொண்டிருந்தோம்...நான்காவது வளைவின் போது டயரில் இருந்து வாடை வர ஆரம்பிச்சது ..அதனால் வேகம் குறைந்த வண்டி சற்று மெதுவாகவே வளைவில் இறங்க ஆரம்பித்தது...மேலும் சில வளைவுகளை கடந்ததும் கண்ட்ரோல் இழந்த வாகனம் வளைவில் வேகமாக இறங்க ஆரம்பித்தது ..டிரைவர் பிரேக் பிடிக்க முடியாமல் இடது பக்கம் மலையின் மீது மோதினார்....வாகனம் வலது புறமாக சாய்ந்து விழுந்து பள்ளத்தின் நோக்கி தேய்த்து கொண்டே போனது தடுப்பு சுவற்றின் மீது மோதிய வாகனம் பள்ளத்தில் விழாமல் நின்றது...(நல்லவேளை அந்த தடுப்பு சுவர் கலப்படம் இல்லாத சிமென்டில் கட்டியது போலிருகிறது) ...எல்லோருக்கும் நல்ல அடி ...வண்டி சாய்ந்தவுடன் நினைவில் நின்றது ....நமக்கா ஆக்சிடன்ட் என்பதும் அடுத்தது சாக போகிறோம் என்ற நினைவு ........நல்ல வேலை அனைவரும் உயிர் பிழைத்தோம் ......
பின் சேலத்தில் வந்து ட்ரீட்மென்ட் எடுத்து பின் வீடு வந்து சேர்ந்தோம்...மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த அந்த டூர் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது ....
பின் சேலத்தில் வந்து ட்ரீட்மென்ட் எடுத்து பின் வீடு வந்து சேர்ந்தோம்...மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த அந்த டூர் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது ....

புதன், 10 ஜூன், 2015