வியாழன், 16 ஏப்ரல், 2015

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)

      பயணம் எப்போதும் நம்மை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும்.வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு  வருடம் ஒரு முறையாவது  பயணம் சென்று வருவது வாழ்க்கையை புதியதாய் உணர வைக்கும் ...அதிக தூரம் உள்ள நாடுகளுக்கு தான் போக வேண்டும் என்பதில்லை..நமக்கு மிக அருகிலேயே நாம் பார்காமல் தவற விட்ட பல அருமையான இடங்கள் உள்ளது...அப்படி நாங்கள் வெகுநாளாய் தவற விட்டிருந்த கொல்லிமலை பார்க்க கிளம்பினோம் ...மலை மேல் ஏறும் வழி சற்று குறுகலாகவே  இருக்கிறது எதிரில் வாகனம் வரும் போது மிக கவனமாக செல்ல வேண்டும்...72 கொண்டைஊசி வளைவுகள் கொண்டது இந்த மலை ...ஏறும் போதினில பச்சை மூலிகையின் வாடையும்  குளிரும் வரவேற்க்கும்...ஏறியவுடன் சோளக்காடு என்ற ஊர் வருகிறது..அங்கு தான் கடைகள் இருக்கும்...அங்கிருந்து 3 கிலோமீட்டர் போனதும் ரிசார்ட்ஸ் இருக்கிறது...நாங்கள் P.A.ரிசார்ட்ஸ் என்னும் இடத்தில் தங்கினோம்..மிளகு கொடியும் பட்டை மரங்கள்,தைல மரங்கள்  சூழ்ந்து அழகாய் காட்சியளிக்கும்  அதில் சுத்தம் என்பது மட்டும் இல்லை...மிக குளிராக இருக்கும் என்பதால் அதற்கேற்ற உடைகலை  எடுத்து செல்வது நல்லது ....அரசு மூலிகை பண்ணை ,தற்கொலை முனை,அய்யாறு அருவி,கொல்லிப்பாவை கோவில்,சீக்குப்பாறை,அறப்பாலீஸ்வரர் ஆலயம் ஆகாய கங்கை படகு சவாரி ,வீயு பாயிண்ட்   என பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது...ஓவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் பயணம் மிகவும் ரசிக்கும் படி உள்ளது...மேகங்களின் அடர்த்தியுள் நாம் பயணிப்பது அருமையாக இருக்கும்...வரும் வழியில் வீட்டிற்கு வேண்டிய தானியங்கள் அனைத்தையும் வாங்கி வரலாம்...மலை தேன் கிடைக்கும் ..பச்சை மிளகு பறித்து வரலாம்,பிள்ளைகளும் இந்த பயணத்தை மிகவும் ரசிப்பார்கள்...மொத்தத்தில் கொல்லிமலை பயணம் நமக்குள் ஏகாந்தமான மன அமைதியை தரும் இடமாகும்......