செவ்வாய், 17 செப்டம்பர், 2019

. சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....4



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....

       இந்த வாள் 2010 ல் நாங்க  ஜெய்ப்பூர் போயிருந்தபொழுது வாங்கியது. .அங்கே தெருக்களில் இதைப்போல நிறைய மாடல்களில் பல நிறங்களில் வாள்களை விற்கிறார்கள். ..அங்குள்ள வீடுகளில் இந்த ஒரு கலைபொருளை அனைவரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.. , நெடுவாள்,சின்ன குத்துவாள் சிறிய கத்தி  என பலவிதமான வகையினில் இருந்தாலும் எனக்கு பிடித்தது இந்த போர்வாள் தான். ...இதை கையில் வைத்து பார்க்கும் போது ஒரு மகாராணி உணர்வை  தந்ததால் இதை விருப்பப்பட்டு வாங்கி வந்தேன். ...கம்பீரமான இந்த வாளை பார்க்கும் போதெல்லாம்  அந்த பிங்க் சிட்டியின் அழகு கண்ணில் வந்து போகும். .....உங்களுக்கும் அங்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் இதை வாங்கி வந்து நீங்களும் மகாராஜாவாகவோ மகாராணியாகவோ மாறிவிடுங்கள் 😆😛😜😜

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....3



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
   இந்த ஷோபீஸ் நான்  சவுத்ஆப்ரிக்கா போயிருந்தபொழுது  வாங்கியது...  அங்கே அவுட்ஷ்ரோம் னு ஒரு இடம்.. அங்கே உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு போயிருந்தோம் ..அதனுடைய  முட்டை ஓடு மிக பலமாக இருக்கும்.. அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடையாது..அவ்வளவு ஸ்ட்ராங் ..முன்பெல்லாம் ஆஸ்ட்ரீசோட இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. ..இப்பொழுது சில பண்ணைகள் மட்டுமே இருக்கிறது,அங்கு யானைசவாரி போல ஆஸ்ட்ரீச் மேல் நாம  சவாரி செய்யலாம் தைரியமிருந்தால். .. அங்கு இருக்கும் கடைகளில் ஆஸ்டிரிச் முட்டை ஓடுகளால் ஆன அலங்கார பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ..அந்த இடத்தின் நினைவாக ஆஸ்ட்ரீச்  ஓட்டின் மீது செய்த  து இந்த  ஷோபீஸ்😊...இதை பார்க்கும் போதெல்லாம் அதன் மேல் செய்த சவாரி நினைவினில் வந்துபோகும்😊

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....2


      புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
      இந்த இரு பழங்குடி இனத்தவரின் பொம்மை வாங்கியது அந்தமானில். ..அந்தமானில் வசிக்கும் ஆதிவாசிகளை பார்ப்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான். ...முன்பெல்லாம் சகஜமாக நடமாடி கொண்டிருந்த அவர்களை அங்கு செல்லும் பயணிகள் திண்பண்டம்,போதைபொருட்கள் கொடுப்பது என பழக்கப்படுத்தியதால் இப்போதும் அவர்களை நெருங்க விடுவதில்லை. இப்போதெல்லாம் மிக கட்டுபாடுடன் போலீஸ் துணையுடன் தான் அப்பகுதியை சுற்றி பார்க்க அனுமதிக்கின்றனர். ..நாங்கள் சென்றபோது இரு ஆதிவாசி சிறுவர்களை கண்டோம்...மரத்தின் மீதமர்ந்து பளிச்சென்று மின்னும் கண்களுடன் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ...அந்த பயணத்தை என்றென்றும் நினைவில் கொள்ள அங்கிருந்து அழைத்துச் கொண்டு வந்ததோம் இந்த இருவரையும் 😆😛