சனி, 25 மார்ச், 2017

ஒதுங்கி கிடக்கும் முந்தானையை 
சரி செய்கிறாள் ஒருத்தி 
கை அசைத்து சிரிக்கிறது 
குழந்தை ஒன்று 
வெள்ளை கோட்டின் உள்ளே செல்கிறான் 
இரு சக்கர ஓட்டி ஒருவன் 
சாலை தாண்ட முன்னெடுத்த காலை 
பின்னெடுத்து வைக்கிறான் பாதசாரி 
முன்செல்லும் பேருந்தின் கண்ணாடி வழியே
பார்கிறார் பேருந்தின் ஓட்டுனர் 
அவர் அவருக்கென எண்ணுகின்றனர் 
பின் வரும் காரின் 
ஒற்றை ஒலி கேட்டவர்கள் .....

செவ்வாய், 14 மார்ச், 2017

அம்மாவின் எழுபதாவது பிறந்தநாளைக்கு என்ன பரிசளிப்பது என்று சற்றே குழப்பமாக இருந்தது ...எது அவர்களுக்கு சந்தோஷம் தரும் என யோசித்து பார்த்த போது ஒரு யோசனை வந்தது....அவர்களது அப்பா வைத்த தென்னை மரத்தை பற்றி இன்றும் அம்மா   பெருமையாக பேசி கொண்டு இருப்பார்கள்...அது போல் இவர்களது கையால் மரம் நாளைய தலைமுறையினர் இதை பற்றி பேசி இவரை நினைவில் வைத்து கொள்ள வகைசெயயலாமே என்று முடிவு செய்து அதற்கு தேவையான மரகன்றுகள் உரம் எல்லாம் வாங்கி சென்று பரிசளித்தோம் ...உண்மையாகவே அம்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் ... அம்மாவின் பிறந்தநாள் அன்று அவரது கைகளாலே மரங்களை நட செய்தோம் ...அவருக்கு மிக பிடித்த விஷயத்தை பரிசளிததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.....

ஞாயிறு, 5 மார்ச், 2017

பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம் (வீரபாண்டி )

      இந்த இடத்தை பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை ....அந்த வழியாக மேகமலை செல்லும் போது வழயில் நீரோடும் இந்த இடத்தை பார்த்ததும் மறுநாளே போக முடிவெடுத்தோம்....பம்ப் செட்டை பார்த்தாலே விடாத நாங்கள் இவ்வளவு அழகிய இடத்தை பார்த்ததும் மறுநாள் கிளம்பி போனோம் ...கோவில் அருகில் செல்லும் இந்த ஆற்றில் சபரிமலை செல்லும் சாமிகளே அதிக அளவில் வருகின்றனர்....ஓடும் ஆற்றில் குளிக்காமல் நீர் வழியும் இடத்திற்கு கொஞ்சம் சிரமப்பட்டே சென்றோம்....வழி எங்கும் திறந்தவெளி கழிப்பறை போல இருக்கிறது...அதை சீர்படுத்தி விட்டால் மிக அழகான இடம் இது ...வழிந்தோடும் தண்ணீரின் உள்ளே அமர்ந்து குளிக்கையில் விழும் தண்ணீர் நம் முன் கண்ணாடி போல் தெரிகிறது ....மிக அழகான அனுபவமாக இருக்கிறது .....இது போன்ற நீரோட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என்பதால் மிகவும் ரசித்தோம் .....அதிக அளவில் கூட்டம் இல்லாத நேரமாக இருந்ததால் நிம்மதியாக குளித்தோம்.......நகராட்சி ஒரு கழிப்பறை அமைத்தால் இது  ஒரு  அழகிய சுற்றுலாத்தளமாக இருக்கும் .....