ஞாயிறு, 5 மார்ச், 2017

பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம் (வீரபாண்டி )

      இந்த இடத்தை பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை ....அந்த வழியாக மேகமலை செல்லும் போது வழயில் நீரோடும் இந்த இடத்தை பார்த்ததும் மறுநாளே போக முடிவெடுத்தோம்....பம்ப் செட்டை பார்த்தாலே விடாத நாங்கள் இவ்வளவு அழகிய இடத்தை பார்த்ததும் மறுநாள் கிளம்பி போனோம் ...கோவில் அருகில் செல்லும் இந்த ஆற்றில் சபரிமலை செல்லும் சாமிகளே அதிக அளவில் வருகின்றனர்....ஓடும் ஆற்றில் குளிக்காமல் நீர் வழியும் இடத்திற்கு கொஞ்சம் சிரமப்பட்டே சென்றோம்....வழி எங்கும் திறந்தவெளி கழிப்பறை போல இருக்கிறது...அதை சீர்படுத்தி விட்டால் மிக அழகான இடம் இது ...வழிந்தோடும் தண்ணீரின் உள்ளே அமர்ந்து குளிக்கையில் விழும் தண்ணீர் நம் முன் கண்ணாடி போல் தெரிகிறது ....மிக அழகான அனுபவமாக இருக்கிறது .....இது போன்ற நீரோட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என்பதால் மிகவும் ரசித்தோம் .....அதிக அளவில் கூட்டம் இல்லாத நேரமாக இருந்ததால் நிம்மதியாக குளித்தோம்.......நகராட்சி ஒரு கழிப்பறை அமைத்தால் இது  ஒரு  அழகிய சுற்றுலாத்தளமாக இருக்கும் .....







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக