செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பயணங்களின் பதிவுகள் ஒகேனகல் மசினகுடி ....2






மே மாதம் மட்டுமே பெரும்பாலும் பயணம் செல்லும் நாங்கள் இந்த மாதம் சென்றது என் மகனால்...அவன் நண்பர்களுடன் செல்ல ஏற்பாடு செய்திருந்த டூரில் எங்களையும் சேர்த்து கொண்டான்...பிள்ளைகள் போகும் பயணத்தில் எப்படி போவது என்று தயங்கிய எங்களை .... பிள்ளைகள் தயக்கமே இல்லாமல் சேர்ந்து போகலாம் என்று உற்சாகமாக சொன்னார்கள்....
முதலில் சென்னையில் இருந்து தருமபுரி சென்று ஒகேனகல் சென்று சேர்ந்தோம்....மெயின் அருவி பரிசல் சவாரி என்று ஏற்கனவே இரண்டு முறை போன இடம் தான் ...இந்த முறை வித்தியாசமான அனுபவமாக இருந்தது ...மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக போவதால் பரிசலை சினி பால்ஸ் இருக்கும் பக்கம் மட்டுமே இயக்குகிறார்கள்....அதுவும் புதுவிதமாக அழகாக இருக்கிறது ....பரிசலில் பயணித்து அங்கிருந்து அருவி விழும் அழகை ரசித்து பின் சினி பால்சில் குளித்து மாலை வரை இளைப்பாறி பின் பரிசலில் திரும்பினோம் ...சினி பால்ஸ் அழகான சிறிய அருவியாக இருந்தாலும் நீர் விழும் வேகம் அதிகமாகவே இருக்கிறது .....எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விடுவதும் சமைத்து தருவதையும் அங்குள்ளவர்கள் சுயதொழிலாக செய்து வருகிறார்கள்....விருப்பமுள்ளவர்கள் அவர்களை அணுகலாம் ......குளித்து சாப்பிட்டு அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினோம்......தொடரும்

பயணங்களின் பதிவுகள் (ஒக்கனகல் மசினகுடி )

பயணங்களின் பதிவுகள்





சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு டூர்....சென்னையில் இருந்து ஒகேனக்கல் அங்கிருந்து மசினகுடி மீண்டும் சென்னை .....நான்கு நாட்கள் பிளான் செய்து கொண்டோம்.....
பயணம் செல்ல முதலில் வேண்டியது மனது .... வீட்டை பூட்டும் போதே நம் பிரச்சனைகளையும் கவலைகளையும் சேர்த்து பூட்டி விட்டு கிளம்புங்கள்....வந்துதும் மீண்டும் புத்துணர்வோடு சுமக்கலாம் ....ஒரு இடத்திருக்கு பயணம் போகும் என்பது போய் சேரும் இடம் மட்டும் அல்ல போகும் பாதை கூட தான்...அதை மனதில் வைத்து கொண்டு பயணியுங்கள் .....முன்பெல்லாம் இரண்டு வழி பாதை தான் அதில் வழி முழுவதும் மரங்கள் , கடைகள்.... எங்கு வேண்டுமென்றாலும் நின்று விரும்பியதை வாங்கி கொண்டு மரநிழலில் ஓய்வெடுத்து கொண்டு சென்ற அந்த பயணங்கள் தான் இனிமை....இப்போதெல்லாம் நான்கு வழி பாதை என்றாலும் வறண்டு போன மரங்கள் அற்ற கடைகள் அற்ற அந்த பாதைகள் பிடிப்பதேயில்லை ....முடிந்த அளவு மாற்று பாதைகளை தேடுவதே என் வேலை....
முன்பு பல விதங்களில் மேப் வாங்கி வைத்திருப்பேன்...போகும் வழியை அதில் ஸ்கெட்ச் செய்து வைத்து கொண்டு பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து கொண்டே வருவேன்....இப்போ அறிவியல் அதை எளிதாக்கி விட்டது ...கூகுளே எல்லா இடத்திற்கும் எளிதாக வழி காட்டி விடுகிறது ....கூகுளின் உதவியோடு இம்முறை கிளம்பினோம்...முதலில் ஒக்கேனக்கல்.......தொடரும்