சனி, 19 பிப்ரவரி, 2011

வேலைக்காரி


உயர் தர ஜாதி நாயை
சங்கிலி பிடித்து
தெருவோரம் அழைத்து சென்று
கழிவுகள் கழித்ததும் வீடு கொண்டு
வந்து சேர்க்கும் பணக்கார வீட்டு
வேலைகாரியின் பிள்ளை கிடக்கிறது
சிறுநீரில் நனைந்தபடி
துடைத்து விட ஆளில்லாமல் .....

கடிகாரம்


கடை கடையாய் தேடி பார்த்தேன்
உன் கைகளில் மிளிரும் அழகான
கடிகாரம் போல் வாங்கிட ....
தேடி அலுத்து கிடைக்காமல்
சோர்ந்த போது தான் புரிந்தது
அழகு அந்த கடிகாரத்தில் இல்லை என்பதும்
உனது கைகளில் அது உள்ளதால்
தான் அது அழகு என்பதும் ......

சனி, 12 பிப்ரவரி, 2011

காதலியின் தேவை


என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை .....

ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்
கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை ....

என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை ....

மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை .....

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

குழந்தை


அம்மா அடித்ததற்காக
அழும் குழந்தையின்
அழுகையின் பின்னால்
ஒளிந்திருக்கிறது வாங்காமல்
போன விளையாட்டு பொருட்களும்
உடைந்து போன பொம்மைகளும்
அழைத்து போகாத இடங்களுக்குமான
ஏக்கங்களின் மிச்சங்கள் ....

தவறு

தவறுகள் செய்யாமல்
பெறும் ஒவ்வொரு
தண்டனையின் போதும்
மனசாத்தான் ஓடுகிறது
தவறுகளை நோக்கி .....