திங்கள், 15 ஏப்ரல், 2024

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 2)

 


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. என்பதகேற்ப பயணத்துக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தோம்...
முதலில் தாய்லாந்து பயணத்திற்கு தேவையான டிக்கெட்... விசா.. தாய்லாந்து பாத்(பணம்) மாற்றுவது என முதற்கட்டவேலைகள் தொடங்கினோம் ...டிக்கெட் ரெடி..அடுத்து விசா ஆன்லைனில் எடுப்பதை விட அங்கேயே போய் ஆன்அரைவல் விசா எடுப்பது தான் ஈஸி என்று சொன்னதால்அதை அங்கேயே எடுக்கலாம்னு முடிவெடுத்தாச்சு..டிராவல்ஸில் இருந்து பட்டாயா வில் 2 நாள் பாங்காங்கில் 2 நாள் என  ரூம் புக் பண்ணி வவுச்சர் அனுப்பியிருந்தார் ...பணத்தை தாய்பாத்தாக ஒரு ஆளுக்கு 10000 பாத் என 20000 பாத் மாற்றி எடுத்துக் கொண்டோம் விசா விற்கு காட்ட இது அவசியம் ... விசா பார்ம் ,வெள்ளை பேக்கிரவுண்டில் 4 ஃபோட்டோ , பாஸ்போர்ட் காப்பி.தங்குமிடங்களின் பதிவுகாப்பி என எல்லாம் விசாவிற்கு ரெடி பண்ணி ஃபைல் பண்ணி வைத்து கொண்டோம்..இதற்கு நடுவில் தாய்லாந்தா போறிங்க வேற ஊருக்கு போகலாம்ல என்று முகத்தை சுழித்து கேட்வர்களிடம் ஹி ஹி என மழுப்பினாலும் அய்யய்யோ என்ன இப்படி சொல்றாங்கனு கொஞ்சம் குழப்பமாவும் ஆயிடுச்சு..அவ்வளவு கெட்ட பேர் எடுத்து வச்சிருக்கு அந்த ஊர் 🤣.பையனும் மருமருகளும் தாய்லாந்து க்கு நாங்க கியாரண்டினு சொன்ன பிறகு தான் தெளிவாச்சு..அப்புறம் தான் முக்கியமான விஷயம் ஷாப்பிங் 😝மகளும் மருமகளும் பார்த்து பார்த்து எடுத்து தந்த புது டிரஸை எல்லாம் சூட்கேஸ்ல போட்டு பேக் பண்ணி மகளும் நானும் முதன்முறையா குடும்பத்தை விட்டு தனியா கிளம்பியாச்சு....மகன் மருமகள் பேத்தி ஏர்போர்ட் வந்தாங்க கணவர் வீட்டு வாசலில் இருந்து வழியனுப்பும் போதே கண்ணெல்லாம் கலங்கிட்டார் போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே னு பாடாத குறைதான்😜...)ஏர்போர்ட் இப்போ மிக பெரியதா இருந்தாலும் ரொம்ப காலியா இருக்க மாதிரி ஃபீலாகுது... ஏர்போர்ட் பார்மாலிட்டிஸ் எல்லாம் ஸ்மூத்தா முடிஞ்சு மூன்றரை மணிநேர பயணத்தில் பாங்காங்  Don Muang airport ல் போய் இறங்கினோம்..... தொடரும்

#Thailand #Motherdaughter #Travelstories

புதன், 26 ஜூலை, 2023

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 1)

 



Life is unpredictable
இந்த வரிகள் எவ்வளவு உண்மையானது என்பதை உணர்த்திய பயணம்✈
20 நாட்களுக்கு முன் இப்படி ஒரு விஷயம் நடக்கும் னு சொன்னால் நம்பியிருக்க வே மாட்டேன்...
என் வாழ்க்கை முதலில் அப்பா பிறகு கணவர் இப்பொழுது மகன் இப்படி ஆண்களை சார்ந்ததாகவே இருந்தது அதுவும் கணவரின் ஆளுமை மிக அதிகம் திருமணமாகி 32 வருமாகிறது இதுவரை ஒருநாள் கூட அவரில்லாமல் தனியே நான் போனதே கிடையாது அம்மா வீட்டிற்கு கூட சேர்ந்தே போவோம்... கடைக்கு போனால் கூட 10 போன் போடுவார் எங்கே போனாலும் சாயங்காலத்துக்குள் வீட்டுக்குள் வந்து டனும் இப்படி எல்லாம் இருந்தவர் இப்ப கொஞ்ச வருஷமா தான் ஷாப்பிங் போனால் அதிகம் போன் செய்வது கிடையாது 9 மணியானாலும் ஒண்ணும் சொல்வதில்லை... இப்படி இருந்தவர் திடீரென்று நீயும் மகளும் எங்கேயாவது வெளிநாடு போய்ட்டு வாங்களேன் என்றதும் சிரிச்சுட்டேன்... என்னை கிண்டல் பண்றார்னு அவர் நிஜமாவே சீரியசா சொன்னார்..மகனும் மருமகளும் ஏற்கனவே போய் வந்த இடம்  தாய்லாந்து..அதனால பையனும் ஏதாவது தாய்லாந்து  பேக்கேஜ் பாருமானு  சொன்னதும் இது கனவா நிஜமானு புரியாமல் ஷாக் ஆயிட்டேன்.... அனுப்பறாங்களோ இல்லையோ சும்மாவாச்சும் பார்க்கலாம்னு பார்த்தால் பெரிய டிராவல்ஸ் எல்லாம் கம்மியா ஆஃபர் போட்டிருந்தாலும் இடமும் ரொம்ப கம்மியா தான் போட்டிருந்தாங்க...... சரி வேற யாரையாவது பார்க்கலாம்னு  Facebook  ல 2 வருஷமா நான் ஃபாலோ பண்ற பேஜ் ல ஃபோன் பண்ணி பேசினேன் அவர் பேச்சில் நம்பிக்கை வரவே அவரிடம் நான் பார்க்க வேண்டிய இடங்களை லிஸ்ட் பண்ணி அனுப்பி வைத்ததும் அவர் பயணதிட்டமும் கட்டணமும் அனுப்பினார் கணவரிடம் காட்டியதும் உனக்கு ஓக்கேனா புரொசீட் பண்ணு ஆனா ஒரே ஒரு விஷயம் இந்த பயணத்தில் வர்ற எல்லா நல்ல கெட்ட விஷயங்களுக்கும் நீதான் பொறுப்பு னு குண்டை தூக்கி போட்டுட்டார்... சரிஓக்கே முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம் னு நினைச்சு பயண திட்டத்தை தொடங்கினோம்... தொடரும்

வியாழன், 6 ஜனவரி, 2022

பயணங்களின் பதிவுகள் ஏற்காடு 2022 (1)

  

     வருடம் தவறாமல் வரும் திருவிழா மாதிரி வருடம் தவறாமல் ஒரு டூர் போறது என்னுடைய பழக்கம்... ரெண்டு வருஷமா போக முடியாத சூழ்நிலை...ஆனால் இந்த






புத்தாண்டின்  முதல் நாளே நான் போன இடம் இந்த 2வருஷத்துக்கான சந்தோஷத்தையும் சேர்த்து  தரும்னு நினைச்சு கூட பார்க்கலை..... ஏற்காடு ஏற்கனவே 2010 ல் ஒருமுறை போய்ட்டு வந்த இடம் தான்...நார்மலா எப்பவும் போற டூர் மாதிரி தான் இருந்தது....அப்போ போனது மே மாதம்  க்ளைமேட் சில்லுனு இருந்தாலும் இந்த டிசம்பர் க்ளைமேட் தந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது... சினிமாவில் வர்ற மாதிரி பனிபடர்ந்த இடங்களும் அமைதியான சூழலும் வார்த்தையில் வர்ணிக்க முடியாது... அதுவும் 1ம் தேதி வருஷபிறப்பு அதுவுமா  அண்ணாமலையார் கோயிலில் சிவன் தரிசனமும் அதை சுற்றி பனி சூழ்ந்த மலையும் அவ்வளவு அழகாக மனதை கொள்ளை கொண்ட இடமாக இருந்தது...வாழ்க்கையில் மறக்கவே முடியாத புத்தாண்டாக அமைந்தது இந்த பயணம்......

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தோழி

ஊர் சுமையெல்லாம்
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......

புதன், 18 மார்ச், 2020

உலகை உலுக்கும் கொரோனா வைரஸும் அதை தடுக்க சில வழிகளும்

அனைவருக்கும் வணக்கம்.வணக்கம் என்கிற நல்ல பழக்கம் நம் இந்தியர்களின் பாரம்பரிய சொத்து .அதை உலகம் எங்கும் எல்லோரையும் ஏற்று கொள்ள வைத்திருக்கிறது இந்த கொரோனா .அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு அனைவரும் இப்பொழுது இந்த நல்ல பழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றனர் ...யாரிடமும் கைகுலுக்காமல் அனைவருக்கும் வணக்கம் என்று சொல்வது இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முதல் வழி ..
கைகளின் மூலமே பெரும்பாலான வைரஸ் பரவுகிறது அதனால் கைகளை சுத்தமாக வைத்திருப்போம்..அடிக்கடி கைகளை கழுவி கொண்டு இருப்பதும் சானிடைசர் கொண்டு சுத்த படுத்துவதும் முடிந்த அளவு கைகளுக்கு உறை மாட்டி கொள்வதும் பொது இடங்களுக்கு செல்லும் போது கைகளால் அல்லாமல் முழங்கையின் துணையுடன் கதவை திறப்பதோ அல்லது மூடுவதோ போன்ற செய்லகளை செய்வதும் இதை தடுக்க முதல் வழி ...மூச்சு காற்றில் பரவாதவாறு முகத்தை மூடும்படி முகமூடி அணிந்து கொள்வது மிக பெரிய பயன் தரும் .பொது இடங்களுக்கு செல்லாமல் முடிந்த அளவு வீட்டின் உள்ளேயே இருக்க பாருங்கள் ...அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் ...உணவு வழக்கத்தை பொறுத்த அளவில் சிக்கனில் வருகிறது மட்டனில் வருகிறது என வரும் வதந்திகளை நம்பாமல் அரசு சொல்லும் செய்திகளை மட்டும் நம்புங்கள் சிக்கன் மட்டன் மீன் போன்ற உணவுகளை நன்கு வேக வைத்து பின் சாப்பிடவும் ...உணவில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள் .மிளகு சீரகம் போன்ற அஞ்சறைப்பெட்டி மருந்துகளையும் அடிக்கடி உண்ணுங்கள் .இது கொரோனவை அழிக்கும் என்பதற்காக இல்லை பொதுவாகவே நம் பாட்டிகள் வைத்தியம் எந்த நோயும் இன்றி வாழ சொல்லி கொடுத்த நம் அடுப்பங்கரை முதலுதவி பொருட்கள் இவை தான் ..நம் உணவு தான் நமக்கு மிக பெரிய மருந்து .முடிந்த அளவு நாம் நம் முயறிச்சியில் வைரஸ் பரவாமல் தடுப்போம்..அதையும் தாண்டி சளி இருமல் காய்ச்சல் என ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செண்டு ஒரு பரிசோதனை செய்து கொள்வது அனைவருக்கும் நலம் தரும் ..குழந்தைகள் விடுமுறை விட்டதும் வெளியில் செல்ல விரும்புவது இயல்பு தான் அவர்கள் கவனத்தி திசை திருப்பி அவர்களுடன் பேசி பழகி விளையாடி கவனத்த்தை ஈர்த்து வெளியில் செல்ல விடாமல் தடுப்பது பெற்றோரின் கடமை..வயதானவர்களும் கோவில் குளம் என்று சுற்றாமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்துங்கள் .. குழந்தை என்றும் வயதானவர்கள் என்றும் பணக்காரன் என்றும் ஏழை என்றும் நோய்க்கு தெரியாது ..எனக்கு வராது என்று யாரும் அலட்சியத்துடன் இருக்காமல் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நோயில் இருந்து நம்மை கொள்ளலாம் .எச்சரிக்கையுடன் இருப்போம் வைரஸை வெல்லுவோம் ..

சனி, 7 மார்ச், 2020

தேவதை ஒன்று பூமியில் பிறந்தது 
வண்ணங்கள் பல கொண்ட
 அழகிய சிறகோடு 
தந்தையென்றும்  தமயனென்றும் 
மாமனென்றும் 
காவல் காப்பதாய்  எண்ணி  
சிறகினை பிடித்து கொண்டதில் 
பறப்பென்பதே தெரியாதது அத்தேவதைக்கு 
மணமுடித்து கொடுத்த இடத்திலும் 
சிறகுகள் கைமாறி சென்றது 
குடும்பமென்றும் பிள்ளைகள் என்றுமானதில் 
சிறகுகள் மறந்தே போனதே அத்தேவதைக்கு 
இறுதியாய் தானொரு தேவதையென 
உணராமலே இவ்வுலகை  விட்டு போனது 
அந்த அழகிய தேவதை ....
   

தேவதைகளின் சிறகினை முறிக்காமல் வலிமையோடு பறக்க வைப்போம் இனிவரும் காலங்களில் ...அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ..






புதன், 4 மார்ச், 2020

மொறு மொறு முறுக்கு சுட சுட தயார்

ஒரு பண்டிகை வந்தா தான் பலகாரம் செய்யணுமா என்ன?...எப்போ எல்லாம் சாப்பிடணுமுன்னு தோணுதோ அப்பவே பலகாரம் பண்ணிடனும்...முறுக்கு செய்யறது மிக பெரிய வேலையா நினைச்சு தீபாவளி வந்தா தான் செய்வேன் முன்னே எல்லாம் ஆனா இப்போ அப்படி இல்லை நினைச்ச உடனே ஈஸியா செய்து சாப்பிடறேன் அது எப்படினு உங்களுக்கும் சொல்லி தரட்டுமா இப்போ ....
தேவையான பொருட்கள்

1 கிலோ பச்சரிசி
1/4 கிலோ உளுந்து
வெள்ளை எள்ளு 2ஸ்பூன்
வேர்க்கடலை 1/2 கிளாஸ்
உடைத்த கடலை 1/2 கிளாஸ்
வெண்ணை 1 கரண்டி
பெருங்காயம் 1 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்

செய்முறை

பச்சரிசியை கழுவி ஈரப்பதம் போக ஒரு வெள்ளை துணியில் போட்டு பேன் காதுல காய வச்சிடுங்க கையில பிடிச்சு பாத காய்ந்த மாதிரி இருக்கனும் அந்த மாதிரி வந்ததும் எடுத்து பாத்திரத்துல போட்டுக்குங்க ....உளுந்தை வாணலியில் போட்டு பொன்னிறமா ஆகிற மாதிரி வருது எடுத்துக்கோங்க...அதுல சீரகம் பெருங்காயம் வேர்க்கடலை உடைச்ச கடலை எல்லாத்தையும் வருது அது கூட போட்டு மிசின் ல கொடுத்து அரைச்சு எடுத்துக்கோங்க ...அரைச்சிட்டு வந்த அரிசி உளுந்து எல்லாத்தையும் ஒண்ணா கலந்து எடுத்துக்கிட்டு சலிச்சிக்கோங்க ...
அதுல தேவையான அளவு உப்பு வெண்ணை மிளகாய் தூள் வெள்ளை எள்ளு போட்டு பிசைந்துக்கோங்க...ரொம்ப தண்ணிய விடாம கைக்கு நல்லா மெது மெத்துன்னு வர மாதிரி வந்ததும் ஒரு வெள்ளை துணியை போட்டி மூடி வச்சிடுங்க...
முறுக்கு குழாயை எடுத்து அதுக்கு உள்ளார எண்ணைய் கொஞ்சம் போட்டு நல்லா தடவி விடுங்க...இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமா எடுத்து அதுக்கு உள்ள போட்டு நல்லா மூடிட்டு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதுல எண்ணைய் தடவி முள்ளு முறுக்கு தட்டு போட்டு நல்ல பிழிஞ்சு விடுங்க....அடுப்பை பத்த வச்சு எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைங்க...எண்ணைய் காய்ந்ததும் இந்த முறுக்கை ஒன்னு ஒண்ணாக எடுத்து அதுல போட்டு நல்ல சிவந்ததும் எடுத்து தட்டுல போட்டு ஆற வச்சிடுங்க...முறுக்கை சுட சுட சாப்பிட கொஞ்சம் மெத்துன்னு இருக்கும் நல்லா ஆற வச்சு சாப்பிடுங்க அப்போ தான் மொறு மொறுனு இருக்கும் ....