சனி, 26 ஏப்ரல், 2014

பயணங்களின் பதிவுகள் (சிம்லா மணாலி)

கோடைக்கு இதமாக சிம்லா மணாலி பயணம் பற்றி எழுதுகிறேன் ...      பெரும் எதிர்பார்போடு சென்ற சிம்லா சிறிது ஏமாற்றமே அளித்தது சிம்லாவில் ஹோட்டல் ரூம் வாசலில் இருந்து நிமிர்ந்து பார்த்தால் மலை மேல் அடுக்கி வைத்து போல் கட்டிடங்கள் நிற்கிறது...குளிர் அதிகமாக இல்லை ஊட்டி குளிர் போல் இதமாக இருந்தது...அங்கிருந்து குப்ரி  என்ற இடத்திற்கு சென்றோம் ..அது ஒரு மலை பாதை குதிரை மேல் ஏறி அரைமணி நேரம் பயணம் ...மலை பாதையில் பழக்கமான குதிரை வேகமாக போகிறது ..எங்கே கால் தவறி பள்ளத்தில் விழுந்து விடுமோ என்கிற  பயத்துடனே பிரயாணம் செய்தோம் ..ஆனாலும் மிக ரசித்து பயணித்தோம் ...அங்கிருந்து மணிக்கரன்  சென்றோம் அங்கு குளிர்  சற்று அதிகமாக இருந்தது அங்குள்ள வெந்நீர் ஊற்றில் குளித்தோம் ..சில்லென்ற பியாஸ் நதியில் வெந்நீர் ஊற்று பார்க்க மிக ரம்மியமாக இருந்தது ...வழி எங்கும் ஆப்பிள் மரங்கள் இருக்கிறது நாங்கள் சென்ற நேரம் பழங்கள் இல்லை வெறும் மரங்களை மட்டும் பார்த்தோம் ...அங்கிருந்து  அடுத்து மணாலி சென்றோம் செல்லும் வழி எங்கும் பியாஸ் நதி அழகை ரசித்து கொண்டே சென்றோம் ...மணாலியில் இரவு தங்கி இருந்தோம் ..மறுநாள் காலை கண்விழித்து வெளியில் வந்து பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது   கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் வெண்ணிற மலைகள் ..ஐஸ் மலை பார்த்ததும் அப்படியொரு பேரானந்தம் எங்களுக்கு ...சந்தோஷத்தில் துள்ளி குதித்து எல்லோரையும் எழுப்பி காண்பித்து எங்களது இன்பத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டோம் ...அங்கிருந்து ஜீப்பில் ரோதங் பாஸ் சென்றோம் அங்கு வழி எங்கும் பனிபாறைகள் வெட்டி அமைத்தது போல்  சாலை  இருந்தது ..அங்கு நிறைய கடைகள் உள்ளது அந்த கடைகளில் குளிர் தாங்கும் ஆடைகள் வாடகைக்கு கிடைக்கிறது ...அதை எடுத்து மாட்டி கொண்டு நடப்பது நிலவில் நடப்பது போல் கடினமாக இருந்தது ....பனி மலையின் மீது சிரமப்பட்டு ஏறி செல்லும் போது கால்கள் புதைந்து பல முறை வழுக்கி விழுந்தோம் ...புதைந்த கால்களின் ஷூவின்  உள்ளே பனி கட்டிகள் போனதும் முதலில் சில் என்று இருந்தாலும் சிறிது நேரத்தில் வலிக்கிறது...ஒருவர் வீழுந்தால் மற்றவரையும் சேர்த்து இழுத்து பனியில் உருண்டு ஒருவர் மீது ஒருவர் பனியை வாரி அடித்து விளையாடி மகிழ்ந்தது மறக்க முடியாத பயணமாக அமைந்தது .......(முக்கியமாக இந்த புகைப்படம்.... நான் விழுந்ததும் என் கணவரையும் சேர்த்து விழ வைத்து விட்டேன்  ..விழுந்ததையும் கொண்டாடும் நானும் என் கணவரும் ..அவமானமாக கருதிய என் மகள் என்னமா இது எழுந்திருமா என்று சலிப்பதையும் என் மகன் இதை பார்த்து ரசித்து சிரிப்பதும் மறக்க முடியாத எனக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக அமைந்து விட்டது ....)