சனி, 29 மார்ச், 2014

பயணங்களின் பதிவுகள் (கேரளா)

மயிலாடும்புழா 

   கேரளாவின் பாலக்காடு பகுதியில் இருக்கிறது மலம்புழாஅணை...எப்பொழுது கேரளா சென்றாலும் அந்த அணைக்கு ஒரு நாள் சென்று வருவோம் ..சென்ற முறை அணையின் பின்புறம் மயிலாடும்புழா என்றொரு இடம் இருப்பதாக கேள்விப்பட்டு சென்று பார்த்தோம்.அழகான வளைவான பாதைகள் பசுமை படர்ந்த மரங்கள் தொடர்ச்சியான மலைத்தொடர் பெரிய நீர்த்தேக்கம்  என்று மனதை கொள்ளை கொள்ளும் மிக ரம்மியமான இடம் ....மலை பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சென்றோம்...உள்ளே செல்ல செல்ல அங்குள்ள மக்கள் எங்கள் காரை விநோதமாக பார்த்தனர்...அதிக வாகனகள் செல்லாத இடம் ...எங்கள் கார் சென்ற பாதையில் எதிரில் யாரும் நடந்து கூட வர முடியாத அளவில் குறுகலாக இருந்தது ..மழை பெய்து சேறாகி கிடந்த பாதை அதில் வண்டி மாட்டினால் மீள்வது கடினம் என பயந்து கொண்டே பயணித்தோம் ...அங்கு முட்புதர் போல் அடர்ந்து கிடந்த இடத்தை காட்டி இது தான் மயிலடும்புழா ஆறு என்றனர் ...எங்களுக்கு சப்பென்று ஆகி விட்டது இதற்கா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்றாகி விட்டது..இறங்கி தான் பாப்போம் என்று துணிந்து இறங்கினோம்..புதர்களின் பின்புறம் பாறைகளின் வளைவில் அழகாய் ஓடி கொண்டு இருந்தது ஆறு..அதில் இறங்கி குளிக்க தொடங்கியவுடன் புரிந்தது அதன் அற்புதம் ..அவ்வளவு சுத்தமான நீர் ...பன்னீரில் குளித்து போல் அப்படி ஒரு புத்துணர்ச்சி ...மலையில் இருந்து நேரிடையாக வரும் புத்தம் புதிய நீர் ...கஷ்டப்பட்டு பயணித்து வந்தது வீண் போகவில்லை என்று சந்தோஷ பட்டோம்.... கொண்டு போன உணவை உண்டு விட்டு மாலை வரை நீரிலேயே கிடந்தோம் இருள் வர போகிறது என்றதும் பிரியவே மனம் இல்லாமல் அந்த இர்டத்தை பிரிந்து வந்தோம் ..யாருக்கேனும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல்




 அந்த இடம் சென்று பார்த்து வாருங்கள் .....

திங்கள், 10 மார்ச், 2014

இன்று போல் நினைவிருக்கிறது....
//உனக்கு பிடித்த ஜாதிமல்லி சூடினால் 
தலை வலிக்குமென்று கூறி எனக்கு நீ சூடியதும்.//...
உப்புமாவின் அடிபிடித்த பாகம் தான் 
பிடிக்குமென்று கடைசியாக உண்டதும் //....
//ஜன்னலோர இருக்கை குளிருமென்று
என்னை அமர வைத்து 
தூர அமர்ந்து ரசித்து பயணித்ததும்//..... 
//நாள் முழுவதும் உழைத்து களைத்தாலும்
மெத்தையில் படுத்தால் 
தூக்கம் வராது என்று கூறி
என்னை உறங்க வைத்து
தரையில் தூக்கமின்றி புரண்டதும் //.....
//புது செருப்பு கால் கடிக்குதென எனக்களித்து
பழயதை  மாட்டி நீ  நடந்ததும்//....
//புது புடவை கன்னி பெண்கள் 
உடுத்த வேண்டுமென எனக்குடுத்தி
 அழகு பார்த்ததும்//....
இப்பொழுது  தான் புரிகிறது
 அத்தனையும் தியாகங்கள் என  ..
இத்தனை வயதாகியும்  
எத்தனை முயன்றும் 
கற்று கொள்ள முடியவில்லை 

""அம்மா 

உன் போல் விட்டு கொடுப்பதே தெரியாமல்
விட்டு கொடுக்கும் கலையை .... 




ஞாயிறு, 2 மார்ச், 2014

குழந்தை மனம்

மண்ணில் புரண்டு புழுதியோடும் சேற்றில் விழுந்து சகதியோடும்விளையாடி திரியும் பிள்ளைகள் படுத்ததும் உறங்குகின்றன சுகமாய் ....வெள்ளை உடை உடுத்தி தூசு படாமல் வலம் வருபவர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர் மனதினில் அழுக்கினை சுமப்பதால்.....