ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பொக்கிஷம்



உடைந்து போன
உபயோகம் இல்லாத
பொருள் தான் ஆனாலும்
பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்
உன்னை நினைவுபடுத்துவதால்...............

வியாழன், 28 அக்டோபர், 2010

ஆயுள்கைதி


பெரியவளாய் அறியப்பட்ட
ஓர் பொன் மாலை பொழுதினில்
பூட்டபட்டதுனக்கு ஓர் விலங்கு ........
ஆண்களின் வாசம் ஆகாதென்றும்
தனிமையில் பயணம் கூடாதென்றும்
வேலைகளை பொறுப்பாய் செய்யவும்
துணையுடன் வெளியில் சென்றுவரவும்
ஆயிரம் கட்டளைகள் இடபட்டதுனக்கு.......
வருடங்கள் பல கடந்த பின்னரும்
இன்னும் தொடர்கிறது கட்டளைகள் ......
தந்தையிடம் தொடங்கிய அது
இன்று கணவரது கைகளில் ....
பின் வரும் காலங்களில் மாறுமுன்
பிள்ளையின் கைகளில் .........
பெண்ணென்று பிறந்ததினால்
ஆயுள் கைதியாய் நீ ............
பூரிக்க ஒரு விஷயமுண்டு
எண்கள் இடவில்லை இன்னுமுனக்கு
பெயர் சொல்லியே அழைகின்றனர் ...............

செவ்வாய், 26 அக்டோபர், 2010

பொம்மலாட்டம்


பொம்மலாட்ட கலைகள்
அழிந்ததாக சொன்னது யார் ....?
ஒவ்வொரு வீட்டிலேயும்
கயிறுகள் அசைக்கபடுகின்றன
கணவரது கைகளில்
பொம்மைகள் ஆடுகின்றன
மனைவி என்ற பெயரினில்......

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

காளி


தெயவாம்சமாய் வாழ்வாள்
என் எண்ணி கட்டி வந்த
என் மருமகள்
தெய்வ வடிவமாகவே
உருவெடுக்கிறாள் அனுதினமும்
காளியாக ..........

மகன்


எப்போதும் என் பிள்ளையென்று
பெருமை கொள்ளும் மகனை
தவறுகள் செய்யும் போது மட்டும்
தாரை வார்க்கிறார் என்னிடம்
உன் பிள்ளையென்று .............

புதன், 20 அக்டோபர், 2010

வேதனை


அழகழகான கூழாங்கற்கள்
வித விதமான அலங்கார பொருட்கள்
வண்ணமயமான விளக்குகள்
அதிசயமாய் பார்க்கும் பிள்ளைகள்
எதுவுமே ஆனந்தம் தரவில்லை
கண்ணாடி பெட்டியில்
அடைப்பட்டு கிடக்கும்
அலங்கார மீனுக்கு .......

பூமணம்


வாழ்நாள் முழுவதும்
பூவின் வாசம் அறியவிடாமல்
பூச்சூடவும் தடை விதிக்கப்பட்ட
விதவையின் இறுதி ஊர்வலம்
முழுவதும் பூக்களின் மணம் ....

அன்னை


பக்குவமாய் குளிப்பாட்டி
அழகாய் உடை மாற்றி
வேடிக்கை காட்டி சோறூட்டி
கட்டியணைத்து கதை சொல்லி
தூங்க வைக்கும் போது
அவளும் அன்னையாக உருவெடுகிறாள்
தனது பொம்மைக்கு .............