வியாழன், 28 அக்டோபர், 2010

ஆயுள்கைதி


பெரியவளாய் அறியப்பட்ட
ஓர் பொன் மாலை பொழுதினில்
பூட்டபட்டதுனக்கு ஓர் விலங்கு ........
ஆண்களின் வாசம் ஆகாதென்றும்
தனிமையில் பயணம் கூடாதென்றும்
வேலைகளை பொறுப்பாய் செய்யவும்
துணையுடன் வெளியில் சென்றுவரவும்
ஆயிரம் கட்டளைகள் இடபட்டதுனக்கு.......
வருடங்கள் பல கடந்த பின்னரும்
இன்னும் தொடர்கிறது கட்டளைகள் ......
தந்தையிடம் தொடங்கிய அது
இன்று கணவரது கைகளில் ....
பின் வரும் காலங்களில் மாறுமுன்
பிள்ளையின் கைகளில் .........
பெண்ணென்று பிறந்ததினால்
ஆயுள் கைதியாய் நீ ............
பூரிக்க ஒரு விஷயமுண்டு
எண்கள் இடவில்லை இன்னுமுனக்கு
பெயர் சொல்லியே அழைகின்றனர் ...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக