வியாழன், 29 டிசம்பர், 2011

குமரியின் குமுறல்

குழந்தையாய் இருந்த நான்
குமரி ஆனேன் நேற்று ....
நேற்று வரை எனக்கும்
எனது தோழனுக்கும் இருந்த உறவு
இன்று ஆனது தப்பாய் ....
இதுவரை எங்களது பார்வையில்
அன்பும் சந்தோஷமும் கண்டவர்கள்
இன்று அதை காதல் என்கிறார்கள் ...
நேற்றுவரை எங்களது சிரிப்பை
உல்லாசம் குழந்தை தனம் என்றவர்கள்
இன்று கள்ளத்தனம் பல்லிளிப்பு என்கிறார்கள் ....
நேற்று வரை எங்களது கைகோர்பில்
வெள்ளந்தி தனமும் நட்பும் பார்த்தவர்கள்
இன்று அதை காமம் என்கிறார்கள் ....
குற்றம் எங்கள் மீதல்ல
இன்னமும் நாங்களே கடந்திராத எங்களது பால்யத்தை
நீங்கள் கடந்தது தான் குற்றம் .......

செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஆசை

தேர் போல் ஜோடனை
அழகான தோரணங்கள்
வித விதமான மாலைகள்
மனம் மயக்கும் வாசனை திரவியங்கள்
பாழும் மனதில் தோன்றுகிறது ஆசை
பாடையின் மீதும் .......

சனி, 17 டிசம்பர், 2011

கொலுசொலி

ஆளான நாள் முதலாய்
அணிய சொல்லி வற்புறுத்துகிறாள் அம்மா..
கொத்து கொத்தாய் முத்துகளோடு கூடி
சத்தமிடும் கொலுசுகளை ......
இன்று எடுத்து அணிந்தேன்
அழகான கொத்து கொலுசினை
சந்தோஷப் படுகிறாள் அம்மா
இன்றாவது தன் பேச்சை கேட்கிறாளே என்று....
புரியவில்லை அவர்களுக்கு
மெல்லிய எனது கொலுசொலி
உன் முகம் திருப்பும் அளவில்
சத்தமிடவில்லை என்பதால் மாற்றுகிறேன் என்று ....

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மஞ்சள்நீராடு விழா


அரசியல்வாதி வீட்டு பெண்ணுக்கு
மஞ்சள்நீராட்டு விழா
தலைவர் பெயர் போட பாதிபக்கம்
துணை தலைவருக்கு மீதிபக்கம்
தொண்டர்களுக்கு சிறுபகுதி
பெண்ணுக்கோ மீதி பகுதி
பிரித்து போட்டு பத்திரிக்கை அடித்ததில்
மிச்சமேதும் இடமில்லை முறைசெய்யும்
தாய்மாமன் பெயரிட ........