ஆளான நாள் முதலாய்
அணிய சொல்லி வற்புறுத்துகிறாள் அம்மா..
கொத்து கொத்தாய் முத்துகளோடு கூடி
சத்தமிடும் கொலுசுகளை ......
இன்று எடுத்து அணிந்தேன்
அழகான கொத்து கொலுசினை
சந்தோஷப் படுகிறாள் அம்மா
இன்றாவது தன் பேச்சை கேட்கிறாளே என்று....
புரியவில்லை அவர்களுக்கு
மெல்லிய எனது கொலுசொலி
உன் முகம் திருப்பும் அளவில்
சத்தமிடவில்லை என்பதால் மாற்றுகிறேன் என்று ....